இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி

 திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் 

இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி 


2.61 திருவெண்காடு

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


655

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித் 

தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள் 

அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும் 

வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே. 01


656

நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப் 

பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல் 

ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும் 

வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. 02


657

தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்

கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள் 

உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும் 

வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே. 03


658

நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன் 

உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே 

கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும் 

விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே. 04

659

பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென் 

றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள் 

தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும் 

வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே. 05


660

ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென் 

றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட் 

கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும் 

வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே. 06


661

கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால் 

மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய் 

ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும் 

வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே. 07


662

வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி 

முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும் 

இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும் 

விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே. 08


663

கரியா னோடு கமல மலரான் காணாமை 

எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட் 

குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும் 

விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே. 09


664

பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த 

ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி 

மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத 

வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே. 10


665

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக் 

கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான் 

நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க் 

கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே. 11


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

2.62 திருமீயச்சூர் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


666

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் 

பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி 

மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன் 

மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே. 01


667

பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர் 

நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி 

ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி 

மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. 02


668

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் 

மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத் 

தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க் 

கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே. 03


669

வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப் 

பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட 

நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன் 

மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே. 04


670

விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் 

படையார் பூதஞ் சூழப் பாட லாடலார் 

பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார் 

விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே. 05


671

குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை 

ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி 

நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன் 

மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே. 06


672

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார் 

கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார் 

காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் 

மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே. 07


673

புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர் 

ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச 

வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை 

மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே. 08


674

காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார் 

போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார் 

கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி 

மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே. 09


675

கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக் 

கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார் 

பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால் 

விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. 10


676

வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர் 

நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன் 

பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி 

ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே.


11> இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர், தேவியார் - சுந்தரநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


677

மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே 

துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர் 

அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு 

பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே. 01


678

மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால் 

ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர் 

நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும் 

பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே. 02


679

பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண் 

டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக் 

கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால் 

பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே. 03


680

வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற 

கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர் 

அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய 

பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே. 04


681

என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை 

மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர் 

அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர் 

பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே. 05


682

வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும் 

வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர் 

தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும் 

புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே. 06


683

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான் 

சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர் 

அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே. 07


684

இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும் 

பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான் 

வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான 

புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே. 08


685

முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட 

ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங் 

கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள் 

புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே. 09


686

கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட 

மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல 

பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் 

ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே. 10


687

நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன் 

பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல் 

செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள் 

அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே.


11இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர், தேவியார் - அழகம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.64 திருமுதுகுன்றம்

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


688

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே 

ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் 

ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி 

மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே. 01


689

எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார் 

சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை 

மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு 

முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே. 02


690

நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந் 

தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப் 

பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த 

மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே. 03


691

தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங் 

குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி 

இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர் 

முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே. 04


692

வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ் 

சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார் 

கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும் 

முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே. 05


693

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி 

நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் 

கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் 

மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. 06


  இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07


694

வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை 

நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில் 

பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த 

மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே. 08


695

அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ் 

சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர் 

கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட 

முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. 09


696

கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் 

றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில் 

திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி 

முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே. 10


697

அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன் 

முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக் 

குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள் 

பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே. 11


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.65 திருப்பிரமபுரம் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


698

கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் 

மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் 

பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் 

பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 01


699

கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும் 

ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந் 

தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும் 

பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 02


700

சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங் 

கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் 

மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும் 

பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 03


701

நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங் 

கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும் 

மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் 

பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 04


702

தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும் 

ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும் 

ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும் 

பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. 05


703

விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும் 

அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும் 

வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும் 

பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. 06


704

பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் 

கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந் 

துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும் 

பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. 07


705

பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் 

அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும் 

புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும் 

பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே. 08


706

அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங் 

கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும் 

படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும் 

பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. 09


707

வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் 

அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும் 

உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும் 

பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 10


708

பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய 

அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே 

நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் 

விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே. 11


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


709

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு 

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு 

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 01


710

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு 

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு 

ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு 

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 02


711

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு 

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு 

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு 

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 03


712

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு 

பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு 

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு 

சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 04


713

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு 

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் 

ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு 

தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 05


714

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு 

வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு 

பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு 

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 06


715

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு 

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு 

அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே. 07


716

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு 

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு 

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு 

அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. 08


717

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு 

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு 

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு 

ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. 09


718

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட 

கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு 

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு 

அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே. 10


719

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் 

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் 

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் 

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 11


திருச்சிற்றம்பலம்


2.67 திருப்பெரும்புலியூர் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


720

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் 

விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர் 

கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார் 

பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 01


720

துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள் 

மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக் 

கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த 

பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 02


  * கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை

யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது.


722

கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித் 

துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர் 

வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற 

பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 03


723

ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம் 

பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும் 

ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி 

பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 04


724

தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் 

காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த 

நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த 

பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 05


725

கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் 

முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர் 

மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப் 

பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே. 06


726

மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார் 

குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர் 

கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார் 

பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே. 07


727

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்

துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி 

மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும் 

பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 08


728

சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் 

நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத் 

தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய 

பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 09


729

உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் 

கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர் 

கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப் 

பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 10


730

பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை 

நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் 

மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி 

நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை. 


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.68 திருக்கடம்பூர் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


731

வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத் 

தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக் 

கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில் 

தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே. 01


732

அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும் 

விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப் 

பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம் 

இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே. 02


733 *

இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத் 

தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில் 

ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப் 

புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே. 03


  * இளி - என்பது ஏழிசையிலொன்று.


734

பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங் 

கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில் 

மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும் 

பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே. 04


735

தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் 

நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் 

காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில் 

பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே. 05


736

தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக் 

கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில் 

பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப் 

பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே. 06


737

பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத 

கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில் 

ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன் 

புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே. 07


738

பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில் 

காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில் 

மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித் 

தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே. 08


739

திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும் 

இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன் 

கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில் 

மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே. 09


740

ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச் 

சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர் 

வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன் 

காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே. 10


741

விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங் 

கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி 

நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும் 

படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அமுதகடேசுவரர், தேவியார் - சோதிமின்னம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.69 திருப்பாண்டிக்கொடுமுடி

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


742

பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங் 

கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும் 

எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும் 

பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 01


743

தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் 

வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் 

நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் 

பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே. 02


744

சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும் 

புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும் 

விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப் 

படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 03


745

நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்

கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி 

மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை 

பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 04


746

போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் 

ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும் 

நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப் 

பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே. 05


747

கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் 

பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும் 

வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும் 

படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 06


748

ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந் 

தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங் 

கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல் 

பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 07


749

புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும் 

பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங் 

கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப் 

பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே. 08


750

திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் 

பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான் 

மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே 

பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 09


751

புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால் 

மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால் 

சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு 

பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே. 10


752

கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் 

பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச் 

சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து 

நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. 11


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


753

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி 

புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை 

அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய 

பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே. 01


754

வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந் 

தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி 

கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங் 

காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே. 02


755

புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி 

நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர் 

அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம் 

பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே. 03


756

வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்

தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி

தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்

கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே. 04


757

தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி 

இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை 

நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல 

பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே. 05


758

தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட 

அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி 

விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து 

கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே. 06


759

சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல 

ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி 

ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி 

பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே. 07


760

புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி 

நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர் 

விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து 

திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே. 08


761

சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப் 

பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல் 

நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத 

வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே. 09


762

செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய 

கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய 

விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக் 

கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே. 10


763

கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி 

நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர் 

நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல் 

அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே. 11


764

காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் 

பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை 

நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன 

மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே. 12


இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென் 

றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை 

நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று 

திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம். 


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.71 திருக்குறும்பலா 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


765

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம் 

பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர் 

இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய் 

குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. 01


766

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை 

ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல் 

கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட 

கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே. 02


767

வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி 

ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல் 

பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக் 

கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. 03


768

பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக் 

கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில் 

நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல் 

கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே. 04


769

தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி 

முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த 

மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல் 

குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே. 05


770

நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர் 

கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில் 

ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல் 

கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே. 06


771

பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப் 

பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி 

மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக் 

குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே. 07


772

ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றிச் 

சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல் 

பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக் 

கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே. 08


773

அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி 

விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல் 

மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த 

குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே. 09


774

மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு 

காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில் 

நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக் 

கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே. 10


775

கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல் 

நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன 

இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் 

தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே. 11


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே திருக்குற்றாலம்.

சுவாமிபெயர் - குறும்பலாநாதர்,

தேவியார் - குழன்மொழியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.72 திருநணா 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


776

பந்தார் விரல்மடவாள் பாகமா 

நாகம்பூண் டேற தேறி 

அந்தார் அரவணிந்த அம்மா 


னிடம்போலும் அந்தண் சாரல் 

வந்தார் மடமந்தி கூத்தாட 


வார்பொழிலில் வண்டு பாடச் 

செந்தேன் தெளியொளிரத் தேமாக் 


கனியுதிர்க்குந் திருந ணாவே. 01


777

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் 

மற்றொருகை வீணை யேந்தி 

ஈட்டுந் துயரறுக்கும் எம்மா 


னிடம்போலு மிலைசூழ் கானில் 

ஓட்டந் தருமருவி வீழும் 


விசைகாட்ட முந்தூ ழோசைச் 

சேட்டார் மணிகள் அணியுந் 


திரைசேர்க்குந் திருந ணாவே. 02


778

நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் 

பாகமாய் ஞால மேத்த 

மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க் 


கிடம்போலும் விரைசூழ் வெற்பில் 

குன்றோங்கி வன்றிரைகள் மோத 


மயிலாலுஞ் சாரற் செவ்வி 

சென்றோங்கி வானவர்க ளேத்தி 


அடிபணியுந் திருந ணாவே. 03


779

கையில் மழுவேந்திக் காலிற் 

சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு 

மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் 


கிடம்போலு மிடைந்து வானோர் 

ஐய ரவரெம் பெருமா 


னருளென்றென் றாத ரிக்கச் 

செய்ய கமலம் பொழிதே 


னளித்தியலுந் திருந ணாவே. 04


780

முத்தேர் நகையா ளிடமாகத் 

தம்மார்பில் வெண்ணூல் பூண்டு 

தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா 


ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த 

அத்தேன் அளியுண் களியா 


லிசைமுரல ஆலத் தும்பி 

தெத்தே யெனமுரலக் கேட்டார் 


வினைகெடுக்குந் திருந ணாவே. 05


781

வில்லார் வரையாக மாநாகம் 

நாணாக வேடங் கொண்டு 

புல்லார் புரமூன் றெரித்தார்க் 


கிடம்போலும் புலியு மானும் 

அல்லாத சாதிகளு மங்கழல்மேற் 


கைகூப்ப அடியார் கூடிச் 

செல்லா வருநெறிக்கே செல்ல 


அருள்புரியுந் திருந ணாவே 06


782

கானார் களிற்றுரிவை மேல்மூடி 

ஆடரவொன் றரைமேற் சாத்தி 

ஊனார் தலையோட்டி லூணுகந்தான் 


றானுகந்த கோயி லெங்கும் 

நானா விதத்தால் விரதிகள்நன் 


னாமமே யேத்தி வாழ்த்தத் 

தேனார் மலர்கொண் டடியார் 


அடிவணங்குந் திருந ணாவே 07


783

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் 

வலிதொலைய விரலா லூன்றி 

முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் 


கிடம்போலும் முநனைசேர் சீயம் 

அன்னீர் மைகுன்றி அழலால் 


விழிகுறைய வழியு முன்றில் 

செந்நீர் பரப்பச் சிறந்து 


கரியொளிக்குந் திருந ணாவே.


08

784 மையார் மணிமிடறன் மங்கையோர் 

பங்குடையான் மனைக டோ றும் 

கையார் பலியேற்ற கள்வன் 


இடம்போலுங் கழல்கள் நேடிப் 

பொய்யா மறையானும் பூமி 


யளந்தானும் போற்ற மன்னிச் 

செய்யார் எரியாம் உருவ 


முறவணங்குந் திருந ணாவே.


09

785 ஆடை யொழித்தங் கமணே 

திரிந்துண்பார் அல்லல் பேசி 

மூடு உருவம் உகந்தார் 


உரையகற்றும் மூர்த்தி கோயில் 

ஓடு நதிசேரும் நித்திலமும் 


மொய்த்தகிலுங் கரையில் சாரச் 

சேடர் சிறந்தேத்தத் தோன்றி 


யொளிபெருகுந் திருந ணாவே.


10

786 கல்வித் தகத்தால் திரைசூழ் 

கடற்காழிக் கவுணி சீரார் 

நல்வித் தகத்தால் இனிதுணரும் 


ஞானசம் பந்தன் எண்ணுஞ் 

சொல்வித் தகத்தால் இறைவன் 


திருநணா ஏத்து பாடல் 

வல்வித் தகத்தான் மொழிவார் 


பழியிலரிம் மண்ணின் மேலே.


11இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி 

காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப் 

பெயர் வழங்கப்படுகின்றது.

சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்,

தேவியார் - வேதமங்கையம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.73 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


787 விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் 

புகலிவெங் குருமேற் சோலை 

வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச் 


சிரபுரம்வண் புறவ மண்மேல் 

களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் 


கொச்சைகழு மலமென் றின்ன 

இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் 


பகையெறிவித் திறைவ னூரே.


01

788 திருவளருங் கழுமலமே கொச்சைதே 

வேந்திரனூர் அயனூர் தெய்வத் 

தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் 


காழிதகு சண்பை யொண்பா 

வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் 


தோணிபுரம் உயர்ந்த தேவர் 

வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் 


கண்டத்தோன் விரும்புமூரே.


02

789 வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் 

பூந்தராய் சிலம்பன் வாழூர் 

ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில் 


காழியிறை கொச்சை யம்பொன் 

வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய 


மிக்கயனூர் அமரர் கோனூர் 

ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ 


தரன்நாளும் அமரு மூரே.


03

790 மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் 

புகலிதராய் தோணிபுரம் வான் 

சேமமதில் புடைதிகழுங் கழுமலமே 


கொச்சைதே வேந்திரனூர் சீர்ப் 

பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் 


சிலம்பனூர் காழி சண்பை 

பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் 


பயன்நுகர்வோர் பரவு மூரே. 


04

  *தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி

791 வயங்கொச்சை தயங்கு பூமேல் 

விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர் 

விண்ணவர்தங் கோனூர் வென்றித் 

திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல் 


வம்பெருகு தோணிபுரஞ் சீர் 

உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம் 


உலகத்தில் உயர்ந்த வூரே.


05

792 புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு 

சிரபுரம்பூங் காழி சண்பை 

எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி 


பூந்தராய் தோணிபுரஞ் சீர் 

வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற் 


கொச்சைவா னவர்தங் கோனூர் 

அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை 


யுதைத்துகந்த அப்ப னூரே.


06

793 வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் 

கோனூர்வண் புகலி யிஞ்சி 

வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு 


சண்பைவியன் காழி கொச்சை 

கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் 


தோணிபுரம் பூந்தராய் சீர்ப் 

பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் 


பால்வண்ணன் பயிலு மூரே.


07

794 மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் 

சிலம்பனூர் காழி மூதூர் 

நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை 


வேணுபுரங் கமல நீடு 

கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி 


தராய்தோணி புரங்கூ டப்போர் 

தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள் 


செற்றமலைச் சிலைய னூரே.


08

795 இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் 

பூந்தராய் சிலம்பன் தன்னூர் 

நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத் 


தயனூர்சீர்த் தேவர் கோனூர் 

வரக்கரவாப் புகலிவெங் குருமாசி 


லாச்சண்பை காழி கொச்சை 

அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந் 


தணர்வேத மறாத வூரே.


09

796 மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் 

கொச்சையிந் திரனூர் மெய்ம்மை 

நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார் 


குருப்புகலி தராய்தூ நீர்மேல் 

சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் 


சிலம்பனூர் செருச்செய் தன்று 

மாலோடும் அயனறியான் வண்காழி 


சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.


10

797 ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் 

கொச்சைகழு மலமன் பானூர் 

ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் 


சிரபுரமொண் புறவ நண்பார் 

பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் 


புகலிவெங் குருவு மென்பர் 

சாக்கியரோ டமண்கையர் தாமறியா 


வகைநின்றான் தங்கு மூரே.


11

798 அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் 

தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப் 

புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் 


புகழ்க்காழி சண்பை தொல்லூர் 

மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் 


வேணுபுரம் அயனூர் மேலிச் 

சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன 


தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே.


12

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.74 திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


799 பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் 

குறைவிலாப் புகலி பூமேல் 

மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம் 


பூந்தராய் வாய்ந்த இஞ்சிச் 

சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை 


புகழ்ச்சண்பை காழி கொச்சை 

காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் 


கழுமலம்நாங் கருது மூரே.


01

800 கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த் 

தோணிபுரம் கனக மாட 

உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா 


யுலகாருங் கொச்சை காழி 

திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் 


செங்கமலத் தயனூர் தெய்வத் 

தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை 


முடியண்ணல் தங்கு மூரே.


02

801 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை 

யொளிமருவு காழி கொச்சை 

கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் 


தோணிபுரங் கற்றோ ரேத்துஞ் 

சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப் 


புறவம்அய னூர்பூங் கற்பத் 

தார்மருவும் இந்திரனூர் புகலிவெங் 


குருக்கங்கை தரித்தோ னூரே.


03

802 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் 

தோணிபுரந் தரியா ரிஞ்சி 

எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் 


தராய்புகலி யிமையோர் கோனூர் 

தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி 


சண்பைசெழு மறைக ளெல்லாம் 

விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ 


னூருலகில் விளங்கு மூரே.


04

803 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை 

வேணுபுரம் மேக மேய்க்கும் 

இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி 


யெழிற்புகலி புறவம் ஏரார் 

வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் 


சிரபுரம்வன் னஞ்ச முண்டு 

களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா 


மன்னுடலங் காய்ந்தோ னூரே.


05

804 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் 

கழுமலமாத் தோணிபுரஞ் சீர் 

ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர் 


இருங்கமலத் தயனூர் இன்பம் 

வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் 


தராய்கொச்சை காழி சண்பை 

சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் 


பகைகெடுத்தோன் திகழு மூரே.


06

805 திகழ்மாட மலிசண்பை பூந்தராய் 

பிரமனூர் காழி தேசார் 

மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் 


வயங்கொச்சை புறவம் விண்ணோர் 

புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் 


குருவெம்போர் மகிடற் செற்று 

நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் 


பணிந்துலகில் நின்ற வூரே.


07

806 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி 

புரநிகழும் வேணு மன்றில் 

ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி 


சண்பைவளர் புறவ மோடி 

சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் 


தராய்புகலி தேவர் கோனூர் 

வென்றிமலி பிரமபுரம் பூதங்கள் 


தாங்காக்க மிக்க வூரே.


08

807 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற 

வஞ்சண்பை காழி கொச்சை 

தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் 


பூந்தராய் சிலம்பன் சேரூர் 

மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி 


வெங்குருவல் அரக்கன் திண்டோ ள் 

ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ 


டழித்துகந்த எம்மா னூரே.


09

808 எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் 

கழுமலநற் புகலி யென்றும் 

பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் 


தரனூர்நற் றோணிபுரம் போர்க் 

கைம்மாவை யுரிசெய்தோன் காழியய 


னூர்தராய் சண்பை காரின் 

மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் 


விளங்கியஎம் இறைவ னூரே.


10

809 இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய 

னூர்இமையோர்க் கதிபன் சேரூர் 

குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி 


புரங்குணமார் பூந்தராய் நீர்ச் 

சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் 


கொச்சைகழு மலந்தே சின்றிப் 

பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் 


பரிசறியா அம்மா னூரே.


11

810 அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் 

குருக்கொச்சை புறவ மஞ்சீர் 

மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி 


தோணிபுரந் தேவர் கோனூர் 

அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர் 


வழிமுடக்கு மாவின் பாச்சல் 

தம்மானொன் றியஞான சம்பந்தன் 


தமிழ்கற்போர் தக்கோர் தாமே.


12

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.75 சீகாழி 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


811 விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப் 

பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற் 

கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள் 

மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. 01

812 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும் 

பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான் 

கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் 

நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. 02

813 சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத் 

துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான் 

கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள் 

மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. 03

814 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை 

மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங் 

கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள் 

தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 04

815 தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய் 

நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக் 

கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள் 

தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. 05

816 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே 

மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன் 

கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள் 

பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. 06

817 முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ 

அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங் 

கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள் 

கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 07

818 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி 

கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள் 

நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே 

தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. 08

819 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் 

இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர் 

வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை 

கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. 09

820 நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர் 

அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான் 

கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள் 

வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. 10

821 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள் 

அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் 

வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார் 

விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.76 திருஅகத்தியான்பள்ளி 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


822 வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள் 

நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி 

ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப் 

பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே. 01

823 துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான் 

மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர் 

அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை 

உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே. 02

824 உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங் 

கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் 

அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 

தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே. 03

825 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் 

பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை

ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 

ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. 04

826 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை 

கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் 

கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 

பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே. 05

827 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் 

எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை 

அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 

புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே. 06

828 ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச் 

சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் 

ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை 

நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. 07

829 செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம் 

ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம் 

அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 

இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. 08

830 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் 

அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் 

பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை 

பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 09

831 செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி 

புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி 

அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச் 

சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. 10

832 ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் 

ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள் 

சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய 

மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அகத்தீசுவரர்,

தேவியார் - மங்கைநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.77 திருஅறையணிநல்லூர் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


833 பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா 

வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி 

சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல் 

ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 01

834 இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ 

நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன் 

அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர் 

தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே. 02

835 என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் 

பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று 

முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக் 

கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 03

836 விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் 

உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் 

அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் 

பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே. 04

837 தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ 

ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர் 

மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் 

பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே. 05

838 விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய 

அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் 

நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர் 

உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே. 06

839 வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் 

ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை 

ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் 

வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே. 07

840 தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை 

முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ 

அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் 

நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே. 08

841 வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார் 

செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில் 

ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச் 

சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே. 09

842 வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் 

சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி 

ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப் 

பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே. 10

843 கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் 

பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார் 

மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக் 

கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே. 11இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.78 திருவிளநகர்

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


844 ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர் 

குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி 

நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் 

மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே. 01

845 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண் 

டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் 

புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய 

மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. 02

846 வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த் 

தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட 

காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் 

மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே. 03

847 கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார் 

நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் 

மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் 

மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே. 04

848 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் 

துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் 

சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் 

மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே. 05

849 தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும் 

யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார் 

மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் 

மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே. 06

850 சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார் 

கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார் 

மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் 

விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே. 07

851 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார் 

அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார் 

விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் 

மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே. 08

852 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் 

பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் 

மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் 

மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே. 09

853 உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் 

உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் 

உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல் 

உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே. 10

854 மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய 

நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் 

இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் 

துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர், தேவியார் - தோழியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.79 திருவாரூர் 

பண் - காந்தாரம் 

திருச்ச்ச்சிற்றம்பலம்


855 பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் 

பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு 

சிவனதாட் சிந்தியாப் பேதைமார் 


போலநீ வெள்கி னாயே 

கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந் 


தேறிய காள கண்டன் 

அவனதா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


01

856 தந்தையார் போயினார் தாயரும் 

போயினார் தாமும் போவார் 

கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் 


பார்க்கின்றார் கொண்டு போவார் 

எந்தநாள் வாழ்வதற் கேமனம் 


வைத்தியால் ஏழை நெஞ்சே

அந்தணா ரூர்தொழு துய்யலா 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


02

857 நிணங்குடர் தோல்நரம் பென்புசேர் 

ஆக்கைதான் நிலாய தன்றால் 

குணங்களார்க் கல்லது குற்றம்நீங் 


காதெனக் குலுங்கி னாயே 

வணங்குவார் வானவர் தானவர் 


வைகலும் மனங்கொ டேத்தும் 

அணங்கனா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


03

858 நீதியால் வாழ்கிலை நாள்செலா 

நின்றன நித்த நோய்கள் 

வாதியா ஆதலால் நாளும்நாள் 


இன்பமே மருவி னாயே 

சாதியார் கின்னரர் தருமனும் 


வருணனும் ஏத்து முக்கண் 

ஆதியா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


04

859 பிறவியால் வருவன கேடுள 

ஆதலாற் பெரிய இன்பத் 

துறவியார்க் கல்லது துன்பம்நீங் 


காதெனத் தூங்கி னாயே 

மறவல்நீ மார்க்கமே நண்ணினாய் 


தீர்த்தநீர் மல்கு சென்னி 

அறவனா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


05

860 செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த் 

தேரையாய்ச் சிறு பறவை 

கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற 


லாமென்று கருதி னாயே 

முடிகளால் வானவர் முன்பணிந் 


தன்பரா யேத்து முக்கண் 

அடிகளா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


06

861 ஏறுமால் யானையே சிவிகையந் 

தளகமீச் சேர்ப்பி வட்டில் 

மாறிவா ழுடம்பினார் படுவதோர் 


நடலைக்கு மயங்கி னாயே 

மாறிலா வனமுலை மங்கையோர் 


பங்கினர் மதியம் வைத்த 

ஆறனா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


07

862 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் 

சுவரெறிந் திதுநம் இல்லம் 

புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் 


லாமையான் முகடு கொண்டு 

முன்பெலாம் ஒன்பது வாய்தலார் 


குரம்பையின் மூழ்கி டாதே 

அன்பனா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


08

863 தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் 

புத்திரர் தார மென்னும் 

பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக் 


கில்லெனப் பற்றி னாயே 

வெந்தநீ றாடியார் ஆதியார் 


சோதியார் வேத கீதர் 

எந்தையா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


09

864 நெடியமால் பிரமனும் நீண்டுமண் 

ணிடந்தின்னம் நேடிக் காணாப் 

படியனார் பவளம்போல் உருவனார் 


பனிவளர் மலையாள் பாக 

வடிவனார் மதிபொதி சடையனார் 


மணியணி கண்டத் தெண்டோ ள் 

அடிகளா ரூர்தொழு துய்யலாம் 


மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.


10

865 பல்லிதழ் மாதவி அல்லிவண் 

டியாழ்செயுங் காழி யூரன் 

நல்லவே நல்லவே சொல்லிய 


ஞானசம் பந்தன் ஆரூர் 

எல்லியம் போதெரி யாடுமெம் 


மீசனை யேத்து பாடல் 

சொல்லவே வல்லவர் தீதிலார் 


ஓதநீர் வைய கத்தே.


11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.80 திருக்கடவூர்மயானம் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


866 வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி 

எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார் 

கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் 

பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே. 01

867 மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக் 

கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் 

செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார் 

அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே. 02

868 ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக் 

காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் 

பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார் 

ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 03

869 இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார் 

மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் 

கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார் 

பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே. 04

870 வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத் 

துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக் 

கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார் 

பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 05

871 பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார் 

ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார் 

கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார் 

பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 06

872 பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார் 

ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் 

காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் 

பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 07

873 செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற் 

கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார் 

மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் 

பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 08

874 வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார் 

கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் 

திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப் 

பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 09

875 தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள் 

காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் 

தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர் 

பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 10

876 மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த 

அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப் 

பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை 

இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.81 திருவேணுபுரம் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


877 பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்

ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து

வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்

பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 01

878 சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்

உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்

அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்

படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 02

879 கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்

திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்

மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்

பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 03

880 நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்

ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே

சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்

கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே. 04

881 ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு

சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்

காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்

பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 05

882 மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்

துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்

பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்

தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 06

883 நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்

கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்

ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்

கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. 07

884 இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்

விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்

கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்

விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே. 08

885 தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்

போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்

பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு

சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே. 09

886 நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்

புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே

நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்

விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே. 10

  இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.82 திருத்தேவூர் 

பண் - காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


887 பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்

விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி

தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்

அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே. 01

888 ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு

சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்

தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்

ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 02

889 மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்

கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்

செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்

அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 03

890 முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும்

பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள்

சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்

அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 04

891 பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்

கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்

தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்

ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 05

892 பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்

மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்

திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்

அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 06

893 வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்

தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க

தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்

அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 07

894 தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து

வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்

தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர்

அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 08

895 முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா

எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்

செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்

அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 09

896 பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்

கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு

தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர்

ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 10

897 அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்

நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்

எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்

தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தேவகுருநாதர், தேவியார் - தேன்மொழியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.83 திருக்கொச்சைவயம் 

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


898 நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த 

நெடுமா வுரித்த நிகரில் 

சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள் 


திகழ்தேவன் மேவு பதிதான் 

வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை 


விழவோசை வேத வொலியின் 

சாலநல் வேலையோசை தருமாட வீதி 


கொடியாடு கொச்சை வயமே.


01

899 விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல 

விகிர்தத் துருக்கொள் விமலன்

சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் 


தகவைத்த சோதிபதி தான்

மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து 


கமலத்து வைகும் வயல்சூழ்

கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் 


வளர்கின்ற கொச்சை வயமே.


02

900 படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை 

களைவிக்கும் எங்கள் பரமன்

இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன் 


இடமாய வேர்கொள் பதிதான்

நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும் 


நளிர்சோலை கோலு கனகக்

குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல 


மறையோது கொச்சை வயமே.


03

901 எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து 

முயல்வுற்ற சிந்தை முடுகி

பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு 


பணிவுற்ற பாதர் பதிதான்

மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி 


வயல்பாய வாளை குழுமிக்

குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன 


வளர்கின்ற கொச்சை வயமே.


04

902 பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர 

னொடுதோழ மைக்கொள் பகவன்

இனியன அல்லவற்றை யினிதாக நல்கும் 


இறைவன் இடங்கொள் பதிதான்

முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் 


வளர்தூம மோடி யணவிக்

குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து 


நிறைகின்ற கொச்சை வயமே.


05

903 புலியதள் கோவணங்கள் உடையாடை யாக 

வுடையான் நினைக்கு மளவில்

நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் 


நலமா இருந்த நகர்தான்

கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை 


யுடையார் நிறைந்து வளரப்

பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு 


வரைமேவு கொச்சை வயமே.


06

  இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07

904 மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் 

முடியோடு தோள்கள் நெரியப்

பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ 


டுடனாடி மேய பதிதான்

இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட 


விடுமூச லன்ன கமுகின்

குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள் 


அடிதேடு கொச்சை வயமே.


08

905 வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம் 

முழுதுண்ட மாலும் இகலிக்

கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும் 


அறியாத சோதி பதிதான்

நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து 


விரைதேரப் போது மடுவிற்

புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து 


வயல்மேவு கொச்சை வயமே.


09

906 கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர் 

இடுசீவ ரத்தி னுடையார்

மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல 


விகிர்தத் துருக்கொள் விமலன்

பையுடை நாகவாயில் எயிறார மிக்க 


குரவம் பயின்று மலரச்

செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து 


மணநாறு கொச்சை வயமே.


10

907 இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை 

உலகங்க ளேழு முடனே

மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி 


இனிதா இருந்த மணியைக்

குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த 


தமிழ்மாலை பாடு மவர்போய்

அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும் 


அழகா இருப்ப தறிவே.


11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.84 திருநனிபள்ளி 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


908 காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை 

படர்தொடரி கள்ளி கவினிச்

சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த 


சிவன்மேய சோலை நகர்தான்

தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 


குதிகொள்ள வள்ளை துவள

நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும் 


நனிபள்ளி போலு நமர்காள்.


01

909 சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம் 

வளர்திங்கள் கண்ணி அயலே

இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை 


யிறைவன்னி டங்கொள் பதிதான்

மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து 


மணநாறும் நீல மலரும்

நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை 


நனிபள்ளி போலு நமர்காள்.


02

910 பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் 

ஒழிபாடி லாத பெருமான்

கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை 


யிடமாய காதல் நகர்தான்

வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் 


விடுபோ தலர்ந்த விரைசூழ்

நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும் 


நனிபள்ளி போலு நமர்காள்.


03

911 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு 

தலைமாலை யோடு குலவி

ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக 


வுடையா னுகந்த நகர்தான்

குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட 


பெடைவண்டு தானும் முரல

நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும் 


நனிபள்ளி போலு நமர்காள்.


04

912 தோடொரு காதனாகி யொருகா திலங்கு 

சுரிசங்கு நின்று புரளக்

காடிட மாகநின்று கனலாடு மெந்தை 


யிடமாய காதல் நகர்தான்

வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று 


வெறிநீர் தெளிப்ப விரலால்

நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும் 


நனிபள்ளி போலு நமர்காள்.


05

913 மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து 

மலையான் மடந்தை மணிபொன்

ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை 


பெருமான் அமர்ந்த நகர்தான்

ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப 


அகிலுந்தி யொண்பொன் இடறி

நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும் 


நனிபள்ளி போலு நகர்காள்.


06

914 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் 

கொடுகொட்டி வீணை முரல

வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த 


பெருமான் உகந்த நகர்தான்

புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் 


பணிவார்கள் பாடல் பெருகி

*நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை 


நனிபள்ளி போலு நமர்காள்.


07

  * பாலை நெய்தல் பாடியது - இந்த நான்காவது 

சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில், 

முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா

லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழியப் 

பாடியதும் என்னுந் திருவெண்பாவானுமுணர்க.

915 வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று 

மதியா அரக்கன் வலியோ

டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த 


பெருமான் உகந்த நகர்தான்

நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை 


எனநின்ற நீதி யதனை

நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் 


நனிபள்ளி போலு நமர்காள்.


08

916 நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற 

தொருநீர்மை சீர்மை நினையார்

அறவுரு வேதநாவன் அயனோடு மாலும் 


அறியாத அண்ணல் நகர்தான்

புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை 


புனைகொன்றை துன்று பொதுளி

நறவிரி போதுதாது புதுவாச நாறும் 


நனிபள்ளி போலு நமர்காள்.


09

917 அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் 

இடவுண்டு பட்ட அமணும்

மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர் 


குணமின்றி நின்ற வடிவும்

வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் 


விடையா னுகந்த நகர்தான்

நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் 


நனிபள்ளி போலு நமர்காள்.


10

918 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் 

கமழ்காழி என்று கருத

படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த 


பதியான ஞான முனிவன்

இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி 


னிசையா லுரைத்த பனுவல்

நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க 


வினைகெடுதல் ஆணை நமதே.


11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.85 கோளறு திருப்பதிகம் 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


919 வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் 


உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 


சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


01

920 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க 

எருதேறி யேழை யுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 


உளமே புகுந்த அதனால்

*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் 


உடனாய நாள்க ளவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


02

  *இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத 

12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது. 

விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம். 

ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது 

நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய 

நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது

மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம். 

12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், 

கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், 

ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.

921 உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து 

உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் 


உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி 


திசை தெய்வ மானபலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


03

922 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து 

மறையோது மெங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் 


உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் 


கொடுநோய்க ளான பலவும்

அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


04

923 நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் 

விடையேறும் நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் 


உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு 


மிகையான பூத மவையும்

அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


05

924 வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் 

மடவாள் தனோடு முடனாய்

நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் 


உளமே புகுந்த அதனால்

கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் 


கொடுநாக மோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


06

925 செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக 

விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் 


உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் 


வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


07

926 வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து 

மடவாள் தனோடும் உடனாய்

வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் 


உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் 


இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


08

927 பலபல வேடமாகும் பரனாரி பாகன் 

பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் 


உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் 


வருகால மான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


09

928 கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு 

குணமாய வேட விகிர்தன்

மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் 


உளமே புகுந்த அதனால்

புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் 


திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல 


அடியா ரவர்க்கு மிகவே.


10

929 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி 

வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 


மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து 


நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் 


அரசாள்வர் ஆணை நமதே.


11இப்பதிகம் பாண்டிநாட்டுக் கெழுந்தருளியபோது அருளிச்செய்தது.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.86 திருநாரையூர் 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


930 உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம 

செயல்தீங்கு குற்ற முலகில்

வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம் 


மிகவேத்தி நித்தம் நினைமின்

வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து 


வளர்கங்குல் நங்கை வெருவ

திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழவே.


01

931 ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற 

பிணிநோ யொருங்கும் உயரும்

வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி 


விதியான வேத விகிர்தன்

கானிடை யாடிபூதப் படையா னியங்கு 


விடையான் இலங்கு முடிமேல்

தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு 


திருநாரை யூர்கை தொழவே.


02

932 ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் 

துயருற்ற தீங்கு விரவிப்

பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை 


ஒழிவுற்ற வண்ண மகலும்

போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று 


புகழ்வானு ளோர்கள் புணருந்

தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த 


திருநாரை யூர்கை தொழவே.


03

933 தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும் 

வினைசெற்ற வுற்ற உலகின்

தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் 


நிலையாக நின்று மருவும்

பேயுற வாயகானில் நடமாடி கோல 


விடமுண்ட கண்டன் முடிமேல்

தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழவே.


04

934 வசையப ராதமாய வுவரோத நீங்குந் 

தவமாய தன்மை வரும்வான்

மிசையவ ராதியாய திருமார் பிலங்கு 


விரிநூலர் விண்ணும் நிலனும்

இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி 


யமையாத காத லொடுசேர்

திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழவே.


05

935 உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம் 

உணர்வாக்கும் உண்மை உலகில்

குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் 


நிறைவாற்று நேசம் வளரும்

மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன் 


அரவார்த்த அண்ணல் கழலே

திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற 


திருநாரை யூர்கை தொழவே.


06

936 தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து 

வருதிக் குழன்ற உடலின்

இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று 


நினைவொன்று சிந்தை பெருகும்

முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச் 


சரமுன் றெரிந்த அவுணர்

சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழவே.


07

937 உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம் 

நனியஞ்சு மாத லுறநீர்

மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் 


அழிபா டிலாத கடலின்

அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம் 


அழியத் தடக்கை முடிகள்

திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழவே.


08

938 வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க 

பகைதீர்க்கு மேய வுடலில்

தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற 


கரவைக் கரந்து திகழுஞ்

சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத் 


திருமாலும் நேட எரியாய்ச்

சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழவே.


09

939 மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம் 

வெளியாக்கு முன்னி யுணரும்

படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் 


ஒலிபாடி யாடி பெருமை

உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும் 


உரைமாயும் வண்ணம் அழியச்

செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழவே.


10

940 எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை 

பெருமானை உள்கி நினையார்

திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் 


திருநாரை யூர்கை தொழுவான்

பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் 


உரைமாலை பத்தும் மொழிவார்

திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க 


துளதென்பர் செம்மை யினரே.


11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.87 திருநறையூர் 

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


941 நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி 

யரியான்மு னாய வொளியான்

நீரியல் காலுமாகி நிறைவானு மாகி 


யுறுதீயு மாய நிமலன்

ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த 


நலகண்டு பண்டு சுடலை

நாரியோர் பாகமாக நடமாட வல்ல 


நறையூரின் நம்ப னவனே.


01

942 இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை 

யெதிர்நாணி பூண வரையிற்

கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து 


அமரர்க் களித்த தலைவன்

மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர் 


மனம்நின்ற மைந்தன் மருவும்

நடமயி லாலநீடு குயில்கூவு சோலை 


நறையூரின் நம்ப னவனே.


02

943 சூடக முன்கைமங்கை யொருபாக மாக 

அருள்கார ணங்கள் வருவான்

ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு 


படுபிச்ச னென்று பரவத்

தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு 


குழைதாழ வேழ வுரியன்

நாடக மாகவாடி மடவார்கள் பாடும் 


நறையூரின் நம்ப னவனே.


03

944 சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி 

கதியாக நின்ற கடவுள்

ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன் 


இருளாய கண்டன் அவனித்

தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு 


மலையின்கண் வந்து தொழுவார்

நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் 


நறையூரின் நம்ப னவனே.


04

945 நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி 

நிகழம் பலத்தின் நடுவே

அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன் 


எமர்சுற்ற மாய இறைவன்

மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து 


விடையேறி இல்பலி கொள்வான்

நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் 


நறையூரின் நம்ப னவனே.


05

946 கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை 

மலர்துன்று செஞ்சடை யினான்

பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு 


பலவாகி நின்ற பரமன்

அணுகிய வேதவோசை யகலங்க மாறின் 


பொருளான ஆதி யருளான்

நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து 


நறையூரின் நம்ப னவனே.


06

947 ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க 

மவையார ஆட லரவம்

மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும் 


விகிர்தன் விடங்கொள் மிடறன்

துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம் 


எழிலார வென்றி யருளும்

நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும் 


நறையூரின் நம்ப னவனே.


07

948 அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள் 

எதிருஞ் சிலம்பொ டிசையக்

கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் 


முனிவுற் றிலங்கை யரையன்

உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் 


இசைகேட் டிரங்கி யொருவாள்

நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல 


நறையூரின் நம்ப னவனே.


08

949 குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் 

எதிர்கூடி நேடி நினைவுற்

றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த 


பெரியா னிலங்கு சடையன்

சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச 


வருமைத் திகழ்ந்த பொழிலின்

நலமலர் சிந்தவாச மணநாறு வீதி 


நறையூரின் நம்ப னவனே.


09

950 துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற 

வவர்தாமு மல்ல சமணுங்

கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த 


பெருமான் பிறங்கு சடையன்

தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண 


முறைமாதர் பாடி மருவும்

நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட 


நறையூரின் நம்ப னவனே.


10

951 கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி 

மிகுபந்தன் முந்தி யுணர

ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த 


நறையூரின் நம்ப னவனை

ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த 


தமிழ்மாலை பத்தும் நினைவார்

வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று 


வழிபாடு செய்யும் மிகவே.


11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.88 திருமுல்லைவாயில் 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


952 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் 

நடமன்னு துன்னு சுடரோன்

ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த 


உமைபங்க னெங்க ளரனூர்

களிமண்டு சோலை கழனிக் கலந்த 


கமலங்கள் தங்கு மதுவின்

தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு 


திருமுல்லை வாயி லிதுவே.


01

953 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் 

அயனைப் படைத்த பரமன்

அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு 


மரவிக்க நின்ற அரனூர்

உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி 


யவையோத மோத வெருவித்

தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் 


திருமுல்லை வாயி லிதுவே.


02

954 வாராத நாடன் வருவார்தம் வில்லின் 

உருமெல்கி நாளு முருகில்

ஆராத வின்ப னகலாத அன்பன் 


அருள்மேவி நின்ற அரனூர்

பேராத சோதி பிரியாத மார்பின் 


அலர்மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நெதிநேர நீடு 


திருமுல்லை வாயி லிதுவே.


03

955 ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும் 

இருமூன்றொ டேழு முடனாய்

அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும் 


அறியாமை நின்ற அரனூர்

குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று 


கொடியொன்றொ டொன்று குழுமிச்

சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த 


திருமுல்லை வாயி லிதுவே.


04

956 கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன் 

விடைநாளும் ஏறு குழகன்

நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் 


மதியேறு சென்னி அரனூர்

அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் 


அணிகோபு ரங்க ளழகார்

செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு 


திருமுல்லை வாயி லிதுவே.


05

957 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி 

ஒளியேறு கொண்ட வொருவன்

ஆனேற தேறி யழகேறு நீறன் 


அரவேறு பூணு மரனூர்

மானேறு கொல்லை மயிலேறி வந்து 


குயிலேறு சோலை மருவி

தேனேறு மாவின் வளமேறி யாடு 


திருமுல்லை வாயி லிதுவே.


06

958 நெஞ்சார நீடு நினைவாரை மூடு 

வினைதேய நின்ற நிமலன்

அஞ்சாடு சென்னி அரவாடு கையன் 


அனலாடு மேனி யரனூர்

மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் 


உளதென்று வைகி வரினுஞ்

செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் 


திருமுல்லை வாயி லிதுவே.


07

959 வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் 

முடிபத்து மிற்று நெரிய

உரைவந்த பொன்னின் உருவந்த மேனி 


உமைபங்கன் எங்க ளரனூர்

வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து 


மிளிர்கின்ற பொன்னி வடபால்

திரைவந்து வந்து செறிதேற லாடு 


திருமுல்லை வாயி லிதுவே.


08

960 மேலோடி நீடு விளையாடல் மேவு 

விரிநூலன் வேத முதல்வன்

பாலாடு மேனி கரியானு முன்னி 


யவர்தேட நின்ற பரனூர்

காலாடு நீல மலர்துன்றி நின்ற 


கதிரேறு செந்நெல் வயலிற்

சேலோடு வாளை குதிகொள்ள மல்கு 


திருமுல்லை வாயி லிதுவே.


09

961 பனைமல்கு திண்கை மதமா வுரித்த 

பரமன்ன நம்ப னடியே

நினைவன்ன சிந்தை அடையாத தேரர் 


அமண்மாய நின்ற அரனூர்

வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு 


முகுளங்க ளெங்கு நெரியச்

சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு 


திருமுல்லை வாயி லிதுவே.


10

962 அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த 

அருள்செய்த எந்தை மருவார்

திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி 


திருமுல்லை வாயி லிதன்மேல்

தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான 


மிகுபந்தன் ஒண்டமிழ் களின்

அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர் 


அகல்வானம் ஆள்வர் மிகவே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - முல்லைவனநாதர், தேவியார் - கோதையம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.89 திருக்கொச்சைவயம் 

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


963 அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்

பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்

மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத

குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 01

964 சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்

கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில்

எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்

வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 02

965 பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ

மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்

வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்

கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே. 03

966 கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்

பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்

கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து

கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 04

967 ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ

வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்

ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக்

கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே. 05

968 மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்

துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக

விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்

கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே. 06

  இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07

969 அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்

பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை

வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்

குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 08

970 சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த

ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும்

பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங்

கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே. 09

971 குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்

மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர்

பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்

கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 10

972 கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய

அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்

சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்

முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


973 எந்தை ஈசனெம் பெருமான் 

ஏறமர் கடவுளென் றேத்திச்

சிந்தை செய்பவர்க் கல்லால் 


சென்றுகை கூடுவ தன்றாற்

கந்த மாமல ருந்திக் 


கடும்புனல் நிவாமல்கு கரைமேல்

அந்தண் சோலைநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


01

974 ஈர வார்சடை தன்மேல் 

இளம்பிறை யணிந்த எம்பெருமான்

சீருஞ் செல்வமும் ஏத்தாச் 


சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்

வாரி மாமல ருந்தி 


வருபுனல் நிவாமல்கு கரைமேல்

ஆருஞ் சோலைநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


02

975 *பிணிக லந்தபுன் சடைமேற் 

பிறையணி சிவனெனப் பேணிப்

பணிக லந்துசெய் யாத 


பாவிகள் தொழச்செல் வதன்றால்

மணிக லந்துபொன் னுந்தி 


வருபுனல் நிவாமல்கு கரைமேல்

அணிக லந்தநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


03

  *பிணி - கட்டுதல்

976 துன்ன ஆடையொன் றுடுத்துத் 

தூயவெண் ணீற்றி னராகி

உன்னி நைபவர்க் கல்லால் 


ஒன்றுங்கை கூடுவ தன்றாற்

பொன்னும் மாமணி யுந்திப் 


பொருபுனல் நிவாமல்கு கரைமேல்

அன்ன மாருநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


04

977 வெருகு ரிஞ்சுவெங் காட்டி 

லாடிய விமலனென் றுள்கி

உருகி நைபவர்க் கல்லால் 


ஒன்றுங்கை கூடுவ தன்றால்

முருகு ரிஞ்சுபூஞ் சோலை 


மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்

தருகு ரிஞ்சுநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


05

978 உரவு நீர்சடைக் கரந்த 

வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்

பரவி நைபவர்க் கல்லாற் 


பரிந்துகை கூடுவ தன்றால்

குரவ நீடுயர் சோலைக் 


குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்

அரவ மாருநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


06

979 நீல மாமணி மிடற்று 

நீறணி சிவனெனப் பேணுஞ்

சீல மாந்தர்கட் கல்லாற் 


சென்றுகை கூடுவ தன்றால்

கோல மாமல ருந்திக் 


குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்

ஆலுஞ் சோலைநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


07

980 செழுந்தண் மால்வரை யெடுத்த 

செருவலி இராவணன் அலற

அழுந்த ஊன்றிய விரலான் 


போற்றியென் பார்க்கல்ல தருளான்

கொழுங் கனிசுமந் துந்திக் 


குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்

அழுந்துஞ் சோலைநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


08

981 நுணங்கு நூலயன் மாலும் 

இருவரும் நோக்கரி யானை

வணங்கி நைபவர்க் கல்லால் 


வந்துகை கூடுவ தன்றால்

மணங்க மழ்ந்துபொன் னுந்தி 


வருபுனல் நிவாமல்கு கரைமேல்

அணங்குஞ் சோலைநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


09

982 சாக்கி யப்படு வாருஞ் 

சமண்படு வார்களும் மற்றும்

பாக்கி யப்பட கில்லாப் 


பாவிகள் தொழச்செல்வ தன்றால்

பூக்க மழ்ந்துபொன் னுந்திப் 


பொருபுனல் நிவாமல்கு கரைமேல்

ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் 


அரத்துறை யடிகள்தம் அருளே.


10

983 கறையி னார்பொழில் சூழ்ந்த 

காழியுள் ஞான சம்பந்தன்

அறையும் பூம்புனல் பரந்த 


அரத்துறை யடிகள்தம் அருளை

முறைமை யாற்சொன்ன பாடல் 


மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்

பறையும் ஐயுற வில்லை 


பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.


11இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.

நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவெனப் பதம்பிரிக்க.

இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.91 திருமறைக்காடு 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


984 பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங்

கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந்

திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும்

எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே. 01

985 கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை

ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங்

கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்

தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே. 02

986 நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்

பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்

தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்

கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே. 03

986 ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்

தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்

மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்

நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே. 04

987 அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்

பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்

மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்

டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே. 05

989 பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்

அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்

புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்

மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே. 06

990 நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப்

பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய

வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட

ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே. 07

991 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்

மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க

நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன்

பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே. 08

992 விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்

பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்

கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப

வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே. 09

993 பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்

கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்

அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்

பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே. 10

994 மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்

கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்

செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப்

பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


995 பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி

நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில்

புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி

வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே. 01

996 முயல் வளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை

இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான்

கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்

வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. 02

997 தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்

கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங்

கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்

வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. 03

998 பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத

விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம்

பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த

வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. 04

999 ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்

பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்

மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்

வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. 05

1000 தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக்

கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்

உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல்

வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. 06

1001 தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத்

துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்

அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த

வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே. 07

1002 சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும்

நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்

காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்

வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. 08

1003 சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு

நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்

ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால்

வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே. 09

1004 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம்

மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற்

செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்

மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. 10

1005 பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில்

மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்

தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும்

எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.93 திருத்தெங்கூர் 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


1006 புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்

கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்

இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்

விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 01

1007 சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்

கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்

பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த

வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 02

1008 அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்

படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்

சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்

விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 03

1009 பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்

கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்

வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி

விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 04

1010 சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்

தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை

கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக

விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 05

1011 தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்

எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்

சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற

வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 06

1012 நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்

முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்

பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி

வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 07

1013 எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்

கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்

தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்

விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 08

1014 தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்

பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்

ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்

வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. 09

1015 சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர

இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்

கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த

விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே .10

1016 வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்

கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்

சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்

பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர், தேவியார் - பெரியாம்பிகையம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.94 திருவாழ்கொளிபுத்தூர்

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


1017 சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்

ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்

தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்

வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே. 01

1018 எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்

கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார்

பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார்

வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 02

1019 நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்

வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்

முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்

வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 03

1020 பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்

குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்

அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்

வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 04

1021 பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்

விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்

அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்

வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 05

1022 தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்

கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்

கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை

வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 06

1023 மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்

தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த

ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த

வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 07

1024 ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து

வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்

கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க

வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 08

1025 வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்

என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி

முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை

மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 09

1026 மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்

குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல

துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்

வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே. 10

1027 நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்

வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை

இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்

நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.95 திருஅரசிலி 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம்


1028 பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை

கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி

வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல்

ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே. 01

1029 ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி

வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த

ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்

ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. 02

1030 கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென்

கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்

சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து

அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே. 03

1031 மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்

புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை

தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை

அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே. 04

1032 மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்

தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து

வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி

ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. 05

1033 பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப்

பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்

கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு

அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. 06

  இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07

1034 வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்

கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்

பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு

அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே. 08

1035 குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும்

வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்

செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண

அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே. 09

1036 குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்

திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்

பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்

அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. 10

1037 அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளைக் காழி

நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்

சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த

வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே. 11இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அரைசிலிநாதர், தேவியார் - பெரியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.96 சீகாழி 

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


1038 பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்

செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்

பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்

தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே. 01

1039 தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி

நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு

ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்

காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே. 02

1040 கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந்

திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்

சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி

உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே. 03

1041 சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி

அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந்

துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து

வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே. 04

1042 மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்

எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்

சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க

கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. 05

1043 நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்

ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்

நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்

தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. 06

1044 நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்

விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்

இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்

குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே. 07

1045 கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி

ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச்

சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்

தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. 08

1046 மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்

பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்

சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய

ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே. 09

1047 புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்

சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்

சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு

முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. 10

1048 ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு

---- ---- ---- ----

---- ---- ---- ----

---- ---- ---- ---- 11

  * இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள் 

சிதைந்துபோயின.

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.97 சீகாழி - திருவிராகம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1049 நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்

அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்

உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை

நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. 01

1050 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்

ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்

தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந்

தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. 02

1051 சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்

கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்

ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்

நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே. 03

1052 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்

உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்

பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்

இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. 04

1053 கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்

உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்

விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்

கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே. 05

1054 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்

எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ

பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்

கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. 06

  இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07

1055 பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்

ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்

மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்

பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. 08

1056 காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்

ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்

மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா

நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. 09

1057 நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்

முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்

தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்

சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. 10

1058 தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை

அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை

ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்

மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.98 திருத்துருத்தி - திருவிராகம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1059 வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்

திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்

கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்

உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. 01

1060 அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந்

தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்

கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்

எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே. 02

1061 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்

சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்

பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்

கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ. 03

1062 கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்

அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்

ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்

இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே. 04

1063 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்

பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்

டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே. 05

1064 வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்

துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்

மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ

வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே. 06

1065 கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்

துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்

அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்

மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே. 07

1066 சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்

இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்

கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை

அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே. 08

1067 களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்

வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்

துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி

உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே. 09

1068 புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை

உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந்

துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்

பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே. 10

1069 கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்

சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்

பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே

குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதேசுவரர், தேவியார் - முகிழாம்பிகையம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.99 திருக்கோடிகா - திருவிராகம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1070 இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்

பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்

மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்

கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. 01

1071 அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்

நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ

வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்

கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே. 02

1072 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்

தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்

அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்

கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே. 03

1073 பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை

உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ

மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்

கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே. 04

1074 முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா

தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ

பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்

கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே. 05

1075 ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்

பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்

காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்

கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே. 06

1076 ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்

மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ

பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்

கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே. 07

1077 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்

பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ

வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்

குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே. 08

1078 மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்

செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா

வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்

கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே. 09

1079 தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்

பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை

விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்

கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. 10

1080 கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய

செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை

அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்

பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1081 படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்

இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே

குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்

விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே. 01

1082 கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்

திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்

குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்

விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. 02

1083 உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்

அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே

கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்

வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே. 03

1084 கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்

இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்

பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்

வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே. 04

1085 உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்

துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே

வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்

விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே. 05

1086 கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்

ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்

கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்

வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. 06

1087 உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்

நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்

வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்

விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. 07

1088 ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை

ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்

போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்

வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. 08

1089 ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு

கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்

நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்

வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே. 09

1090 குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்

அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்

பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்

வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே. 10

1091 கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்

பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்

அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்

விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே. 11இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - சிவானந்தவல்லியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.101 திருவாரூர் - திருவிராகம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1092 பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக

நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்

கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி

அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே. 01

1093 விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்

இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்

கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்

அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே. 02

1094 கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்

மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்

வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி

அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே. 03

1095 அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்

குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்

பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை

அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே. 04

1096 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்

தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்

தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்

அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே. 05

1097 கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ

டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்

துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்

அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே. 06

1098 கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை

மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்

தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்

அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே. 07

1099 வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்

நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்

நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை

அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே. 08

1100 இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்

வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்

செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா

அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே. 09

1101 பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்

வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்

மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்

அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே. 10

1102 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா

அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை

நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை

வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.102 திருச்சிரபுரம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1103 அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை

அமரர்தம் பெருமானார்

மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்


வைத்தவர் வேதந்தாம்

பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்


சிரபுரத் தார்சீரார்

பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்


வினையொடும் பொருந்தாரே.


01

1104 கோல மாகரி உரித்தவர் அரவொடும்

ஏனக்கொம் பிளஆமை

சாலப் பூண்டுதண் மதியது சூடிய


சங்கர னார்தம்மைப்

போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்


பொருகடல் விடமுண்ட

நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்


தொழவினை நில்லாவே.


02

1105 மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்

தவங்கெட மதித்தன்று

கானத் தேதிரி வேடனா யமர்செயக்


கண்டருள் புரிந்தார்பூந்

தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்


சிரபுரத் துறையெங்கள்

கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை


குற்றங்கள் குறுகாவே.


03

1106 மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்

காலனை உதைசெய்தார்

பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்


பிணக்கறுத் தருள்செய்வார்

வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்


சிரபுரத் தமர்கின்ற

ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்


கருவினை யடையாவே.


04

1107 பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்

பனிமதி ஆகாசம்

ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்


தலைவனு மாய்நின்றார்

சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி


செழும்புனற் கோட்டாறு

வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும்


அடியவர் வருந்தாரே.


05

1108 ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்

வுலகங்க ளவைமூட

ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக


அந்தரத் துயர்ந்தார்தாம்

யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை


இன்பன்எம் பெருமானார்

வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ


வல்வினை அடையாவே.


06

1109 பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய

பிணமிடு சுடுகாட்டில்

வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்


ஆடும்வித் தகனாரொண்

சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்


தகுசிர புரத்தார்தாந்

தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்


தொழுமவர் தளராரே.


07

1110 இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்

எழில்கொள்வெற் பெடுத்தன்று

கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி


நெரியவைத் தருள்செய்தார்

புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்


றதனிடைப் புகுந்தாருங்

குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு


தெழவினை குறுகாவே.


08

1111 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்

மாயனென் றிவரன்று

கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்


கிளறியும் பறந்துந்தாம்

பண்டு கண்டது காணவே நீண்டவெம்


பசுபதி பரமேட்டி

கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ


வினையவை கூடாவே.


09

1112 பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்

பார்மிசைத் துவர்தோய்ந்த

செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்


தேவர்கள் பெருமானார்

முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில்


மூழ்கிட இளவாளை

வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை


விட்டிடும் மிகத்தானே.


10

1113 பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்

பையர வோடக்கு

நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை


நித்திலப் பெருந்தொத்தை

விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை


விண்ணவர் பெருமானைப்

பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்


பரமனைப் பணிவாரே.


11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.103 திரு அம்பர்த்திருமாகாளம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1114 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்

போழிள மதிசூடிப்

பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்


பிணையல்செய் தவர்மேய

மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளம்

அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்


கருவினை அடையாவே.


01

1115 அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்

அங்கையில் அனலேந்தி

இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக


ளிசைவன பலபூதம்

மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளம்

பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்


பயன்தலைப் படுவாரே.


02

1116 குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்

குரைகழ லடிசேரக்

கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்


கருத்தறிந் தவர்மேய

மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளம்

வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை


வல்வினை அடையாவே.


03

1117 எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்

இழைவளர் நறுங்கொன்றை

தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்


தாமகிழ்ந் தவர்மேய

மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளங்

கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்


காதன்மை யுடையாரே.


04

1118 நெதியம் என்னுள போகமற் றென்னுள

நிலமிசை நலமாய

கதியம் என்னுள வானவர் என்னுளர்


கருதிய பொருள்கூடில்

மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளம்

புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்


டேத்துதல் புரிந்தோர்க்கே.


05

1119 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்

கனல்விடு சுடர்நாகந்

தெண்ணி லாவொடு திலதமு நகுதலை


திகழவைத் தவர்மேய

மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளம்

உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்


வுலகினில் உயர்வாரே.


06

1120 தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்

சுடர்விடு நறுங்கொன்றை

பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்


புகழ்புரிந் தவர்மேய

மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளம்

பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்


பெருமையைப் பெறுவாரே.


07

1121 பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்

பருவரைக் கீழூன்றி

எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த


இறையவன் உறைகோயில்

மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளங்

கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை


கனலிடைச் செதிளன்றே.


08

1122 உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்

ஒளிகிளர் மலரோனும்

பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்


பரவநின் றவர்மேய

மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளங்

கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்


கவலையுங் களைவாரே.


09

1123 பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்

பீலிகொண் டுழல்வாருங்

கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்


கழறநின் றவர்மேய

வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை


வருபுனல் மாகாளம்

பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்


பரவுதல் செய்வோமே.


10

1124 மாறு தன்னொடு மண்மிசை யில்லது

வருபுனல் மாகாளத்

தீறும் ஆதியு மாகிய சோதியை


ஏறமர் பெருமானை

நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்


பந்தன தமிழ்மாலை

கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்


குற்றங்கள் குறுகாவே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்,

தேவியார் - பட்சநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.104 திருக்கடிக்குளம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1125 பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்

புலியுரி யதளாடை

கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு


குரைகழல் சிலம்பார்க்கக்

கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்


துறையுங்கற் பகத்தைத்தம்

முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை


முன்வினை மூடாவே.


01

1126 விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா

விகிர்தனை விழவாரும்

மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும்


வள்ளலை மருவித்தங்

கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்


துறைதரு கற்பகத்தைப்

பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்


பழியிலர் புகழாமே.


02

1127 பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது

புலியதள் அழல்நாகந்

தங்க மங்கையைப் பாகம துடையவர்


தழல்புரை திருமேனிக்

கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்


துறைதரு கற்பகத்தை

எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை


இடும்பைவந் தடையாவே.


03

1128 நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்

தொத்தினை நிகரில்லாப்

பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை


பசும்பொன்னை விசும்பாருங்

கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்


துறையுங்கற் பகந்தன்னைச்

சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை


தேய்வது திணமாமே.


04

1129 சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு

துன்னிய தழல்நாகம்

அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல


கொண்டடி யவர்போற்றக்

கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்


துறைதரு கற்பகத்தை

விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர்


விதியுடை யவர்தாமே.


05

1130 மாதி லங்கிய பாகத்தன் மதியமொ

டலைபுனல் அழல்நாகம்

போதி லங்கிய கொன்றையும் மத்தமும்


புரிசடைக் கழகாகக்

காதி லங்கிய குழையினன் கடிக்குளத்


துறைதரு கற்பகத்தின்

பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை


பற்றறக் கெடுமன்றே.


06

1131 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்

குழாம்பல குளிர்பொய்கை

உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்


பூவைசே ருங்கூந்தல்

கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்


துறையுங்கற் பகத்தைச்சீர்

நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை


நிற்ககில் லாதானே.


07

1132 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்

மதியிலா மையிலோடி

எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற


இறையவன் விரலூன்றக்

கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்


கடிக்குளந் தனில்மேவிக்

கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்


குணமுடை யவர்தாமே.


08

1133 நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு

நிகழடி முடிகாணார்

பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்


பவளத்தின் படியாகிக்

காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்


துறையுங்கற் பகத்தின்றன்

சீரி னார்கழ லேத்தவல் லார்களைத்


தீவினை யடையாவே.


09

1134 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்

குறியினில் நெறிநில்லா

மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்


கொள்ளன்மின் விடமுண்ட

கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்


துறைதரும் எம்மீசர்

தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்


தூநெறி எளிதாமே.


10

1135 தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்

மன்னன்நற் சம்பந்தன்

மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்


மாலதாய் மகிழ்வோடுங்

கனம லிகட லோதம்வந் துலவிய


கடிக்குளத் தமர்வானை

இனம லிந்திசை பாடவல் லார்கள்போய்


இறைவனோ டுறைவாரே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கற்பகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.105 திருக்கீழ்வேளூர் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1136 மின்னு லாவிய சடையினர் விடையினர்

மிளிர்தரும் அரவோடும்

பன்னு லாவிய மறைஒலி நாவினர்


கறையணி கண்டத்தர்

பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்


புகழ்மிகு கீழ்வேளூர்

உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை


யோடிட வீடாமே.


01

1137 நீரு லாவிய சடையிடை யரவொடு

மதிசிர நிரைமாலை

வாரு லாவிய வனமுலை யவளொடு


மணிசிலம் பவையார்க்க

ஏரு லாவிய இறைவன துறைவிடம்


எழில்திகழ் கீழ்வேளூர்

சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்


பிணியொடு வினைபோமே.


02

1138 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு

வெள்ளெருக் கலர்மத்தம்

பண்ணி லாவிய பாடலோ டாடலர்


பயில்வுறு கீழ்வேளூர்ப்

பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்


கோயிலெம் பெருமானை

உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்


உலகினில் உள்ளாரே.


03

1139 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்

தொங்கவைத் தழகாக

நாடு லாவிய பலிகொளும் நாதனார்


நலமிகு கீழ்வேளூர்ப்

பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்


கோயிலுட் பிரியாது

நீடு லாவிய நிமலனைப் பணிபவர்


நிலைமிகப் பெறுவாரே.


04

1140 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை

வடமணி சிரமாலை

மன்று லாவிய மாதவ ரினிதியன்


மணமிகு கீழ்வேளூர்

நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்


நிமலனை நினைவோடுஞ்

சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை


தேய்வது திணமாமே.


05

1141 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்

கூத்தனை மகிழ்ந்துள்கித்

தொத்து லாவிய நூலணி மார்பினர்


தொழுதெழு கீழ்வேளூர்ப்

பித்து லாவிய பத்தர்கள் பேணிய


பெருந்திருக் கோயில்மன்னும்

முத்து லாவிய வித்தினை யேத்துமின்


முடுகிய இடர்போமே.


06

1142 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்

வன்னியுந் துன்னாரும்

கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர்


காதல்செய் கீழ்வேளூர்

மறைநி லாவிய அந்தணர் மலிதரு


பெருந்திருக் கோயில்மன்னும்

நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்


நினைபவர் வினைபோமே.


07

1143 மலைநி லாவிய மைந்தனம் மலையினை

யெடுத்தலும் அரக்கன்றன்

தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்


உறைதரு கீழ்வேளூர்க்

கலைநி லாவிய நாவினர் காதல்செய்


பெருந்திருக் கோயிலுள்

நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்


நினையவல் வினைபோமே.


08

1144 மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு

மலரவன் காண்பொண்ணாப்

பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி


பாகனைப் பரிவோடுஞ்

செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்


மல்கிய கீழ்வேளூர்

நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்


நடலைகள் நணுகாவே.


09

1145 சீறு லாவிய தலையினர் நிலையிலா

அமணர்கள் சீவரத்தார்

வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்


சுரும்பமர் கீழ்வேளூர்

ஏறு லாவிய கொடியனை யேதமில்


பெருந்திருக் கோயில்மன்னு

பேறு லாவிய பெருமையன் திருவடி


பேணுமின் தவமாமே.


10

1146 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை

அழகமர் கீழ்வேளூர்த்

திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்


கோயிலெம் பெருமானை

இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு


புகலிமன் சம்பந்தன்

தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி


பெறுவது திடமாமே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.106 திருவலஞ்சுழி 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1147 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே

யிருங்கடல் வையத்து

முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை


முழுமணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி


வாணனை வாயாரப்

பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்


வழிபடும் அதனாலே.


01

1148 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை

விரிகடல் வருநஞ்சம்

உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய


இறைவனை உலகத்தில்

வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை


வலஞ்சுழி யிடமாகக்

கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ


டினிதிருந் தமையாலே.


02

1149 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன

விறலின்கண் அடியாரைப்

பரிந்து காப்பன பத்தியில் வருவன


மத்தமாம் பிணிநோய்க்கு

மருந்து மாவன மந்திர மாவன


வலஞ்சுழி யிடமாக

இருந்த நாயகன் இமையவ ரேத்திய


இணையடித் தலந்தானே.


03

1150 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்

அறத்திற முனிவர்க்கன்

றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்


தினிதருள் பெருமானார்

மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி


யிடமகிழ்ந் தருங்கானத்

தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய


அற்புதம் அறியோமே.


04

1151 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்

எரியுரு வொருபாகம்

பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்


பெருங்கடற் பவளம்போல்

வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்


பரிபவர் மனம்புக்க

எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்


இணையடி தொழுவாரே.


05

1152 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்

மேனியர் மடமாதர்

இருவ ராதரிப் பார்பல பூதமும்


பேய்களும் அடையாளம்

அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்


தகந்தொறும் பலிக்கென்று

வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே


வரிவளை கவர்ந்தாரே.


06

1153 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்

குலவிய நெய்த்தானம்

என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்


இமையவர் பணிகேட்பார்

அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்


வலஞ்சுழி யரனார்பால்

சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று


சேயிழை தளர்வாமே.


07

1154 குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்

குலவரைப் பரப்பாய

கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி


தோளிரு பதுமூன்றி

மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்


வலஞ்சுழி யெம்மானைப்

பயில வல்லவர் பரகதி காண்பவர்


அல்லவர் காணாரே.


08

1155 அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்

அரவணைத் துயின்றானுங்

கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்


மாண்பமர் தடக்கையில்

மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி


வலங்கொடு பாதத்தால்

சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு


துன்பங்கள் களைவாரே.


09

1156 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்

தவம்புரிந் தவஞ்செய்வார்

நெறிய லாதன கூறுவர் மற்றவை


தேறன்மின் மாறாநீர்

மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி


மருவிய பெருமானைப்

பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்


அளவறுப் பொண்ணாதே.


10

1157 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய

மருந்தினை வயற்காழி

நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்


நவிற்றிய தமிழ்மாலை

ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்


கேட்டுகந் தவர்தம்மை

வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்


வருத்தம்வந் தடையாவே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சித்தீசநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.107 திருக்கேதீச்சரம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1158 விருது குன்றமா மேருவில் நாணர

வாவனல் எரியம்பாப்

பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்


றுறைபதி யெந்நாளுங்

கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்


பொழிலணி மாதோட்டங்

கருத நின்றகே தீச்சரங் கைதொழக்


கடுவினை யடையாவே.


01

1159 பாடல் வீணையர் பலபல சரிதையர்

எருதுகைத் தருநட்டம்

ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்


சுண்டிருள் கண்டத்தர்

ஈட மாவது இருங்கடற் கரையினில்


எழில்திகழ் மாதோட்டம்

கேடி லாதகே தீச்சரங் கைதொழக்


கெடுமிடர் வினைதானே.


02

1160 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்

அறைகழல் சிலம்பார்க்கச்

சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்


அகந்தொறும் இடுபிச்சைக்

குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்


உயர்தரு மாதோட்டத்

தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்


கருவினை யடையாவே.


03

1161 பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்

விரிதரு கரத்தேந்தும்

வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்


மறிகடல் மாதோட்டத்

தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்


பரிந்தசிந் தையராகி

முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்


மொய்த்தெழும் வினைபோமே.


04

1162 நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்

மடைந்தவர்க் கருளீய

வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்


மலிகடல் மாதோட்டத்

தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்


இராப்பகல் நினைந்தேத்தி

அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்


அன்பராம் அடியாரே.


05

1163 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்

பொருந்தவைத் தொருபாகம்

மாழை யங்கயற் கண்ணிபா லருளிய


பொருளினர் குடிவாழ்க்கை

வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற


மருவிய மாதோட்டக்

கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே


தீச்சரம் பிரியாரே.


06

1164 பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்

லுலகினில் உயிர்வாழ்க்கை

கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்


காதலித் துறைகோயில்

வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை


நடமிடு மாதோட்டந்

தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே


தீச்சர மதுதானே.


07

1165 தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்

தெடுத்தவன் முடிதிண்டோ ள்

தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த


தலைவனார் கடல்வாயப்

பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்


பொருந்திய மாதோட்டத்

துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே


தீச்சரத் துள்ளாரே.


08

1166 பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்

புவியிடந் தெழுந்தோடி

மேவி நாடிநின் அடியிணை காண்கிலா


வித்தக மென்னாகும்

மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா


தோட்டநன் னகர்மன்னித்

தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்


திருந்தஎம் பெருமானே.


09

1167 புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்

புறனுரைச் சமணாதர்

எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய


ஏழைமை கேலேன்மின்

மத்த யானையை மறுகிட உரிசெய்து


போர்த்தவர் மாதோட்டத்

தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே


தீச்சரம் அடைமின்னே.


10

1168 மாடெ லாமண முரசெனக் கடலின

தொலிகவர் மாதோட்டத்

தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத்


தடிகளை யணிகாழி

நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்


நவின்றெழு பாமாலைப்

பாட லாயின பாடுமின் பத்தர்காள்


பரகதி பெறலாமே.


11இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கேதீச்சுவரர், தேவியார் - கௌரிநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.108 திருவிற்குடிவீரட்டானம் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1169 வடிகொள் மேனியர் வானமா மதியினர்

நதியினர் மதுவார்ந்த

கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்


உடைபுலி யதளார்ப்பர்

விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை


விற்குடி வீரட்டம்

அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை


அருவினை யடையாவே.


01

1170 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்

கடிகமழ் சடைக்கேற்றி

உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்


பொருகரி யுரிபோர்த்து

விளங்கு மேனியர் எம்பெரு மானுறை


விற்குடி வீரட்டம்

வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்


வருத்தம தறியாரே.


02

1171 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி

மார்பினர் வலங்கையில்

எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்


தாடிய வேடத்தர்

விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி


விற்குடி வீரட்டம்

பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்


பேணுவ ருலகத்தே.


03

1172 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்

பொலிதர நலமார்ந்த

பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு


கடலெழு விடமுண்டார்

வேத மோதிய நாவுடை யானிடம்


விற்குடி வீரட்டஞ்

சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி


தீவினை கெடுமாறே.


04

1173 கடிய ஏற்றினர் கனலன மேனியர்

அனலெழ வூர்மூன்றும்

இடிய மால்வரை கால்வளைத் தான்றன


தடியவர் மேலுள்ள

வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை


விற்குடி வீரட்டம்

படிய தாகவே பரவுமின் பரவினாற்


பற்றறும் அருநோயே.


05

1174 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்

கையினர் மெய்யார்ந்த

அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்


அரியவர் அல்லார்க்கு

விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி


விற்குடி வீரட்டம்

எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்


கிடர்கள்வந் தடையாவே.


06

  இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07

1175 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை

யிகலழி தரவூன்று

திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு


பொருளினன் இருளார்ந்த

விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி


விற்குடி வீரட்டந்

தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்


துன்பநோ யடையாவே.


08

1176 செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்

திருவடி யறியாமை

எங்கு மாரெரி யாகிய இறைவனை


யறைபுனல் முடியார்ந்த

வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்


விற்குடி வீரட்டந்

தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்


தவமல்கு குணத்தாரே.


09

1177 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ

ராடைய ரவர்வார்த்தை

பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்


பரிவுறு வீர்கேண்மின்

விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்


விற்குடி வீரட்டங்

கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்


கருத்துறுங் குணத்தாரே.


10

1178 விலங்க லேசிலை யிடமென வுடையவன்

விற்குடி வீரட்டத்

திலங்கு சோதியை எம்பெரு மான்றனை


யெழில்திகழ் கழல்பேணி

நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்


பந்தனற் றமிழ்மாலை

வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்


மற்றது வரமாமே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - மைவார்குழலியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.109 திருக்கோட்டூர் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1179 நீல மார்தரு கண்டனே நெற்றியோர்

கண்ணனே ஒற்றைவிடைச்

சூல மார்தரு கையனே துன்றுபைம்


பொழில்கள்சூழ்ந் தழகாய

கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவார்கள்

சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத்


தாங்குவர் பாங்காலே.


01

1180 பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு

மெல்விர லரவல்குல்

மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென


மிழற்றிய மொழியார்மென்

கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவார்கள்

சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு


அருள்பெறல் எளிதாமே.


02

1181 நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்

அடியவர் தமக்கெல்லாஞ்

செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்


செல்வமல் கியநல்ல

கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவார்கள்

அம்பொ னார்தரு முலகினில் அமரரோ


டமர்ந்தினி திருப்பாரே.


03

1182 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா

மாங்கனி பயில்வாய

கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்


அன்னஞ்சேர்ந் தழகாய

குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவார்கள்

நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை


நீடிய புகழாரே.


04

1183 உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்

அன்பராம் அடியார்கள்

பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு


பத்திசெய் தெத்திசையுங்

குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவார்கள்

அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்


அவனருள் பெறலாமே.


05

1184 துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்

துன்னெருக் கார்வன்னி

பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்


புலியுரி யுடையாடை

கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவாரை

என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை


ஏதம்வந் தடையாவே.


06

1185 மாட மாளிகை கோபுரங் கூடங்கள்

மணியரங் கணிசாலை

பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்


பரிசொடு பயில்வாய

கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவார்கள்

கேட தொன்றில ராகிநல் லுலகினிற்


கெழுவுவர் புகழாலே.


07

1186 ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை

யெடுத்தலும் உமையஞ்சிச்

சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு


நாளவற் கருள்செய்த

குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்


கொழுந்தினைத் தொழுவார்கள்

தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்


தவமுடை யவர்தாமே.


08

1187 பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும்

முத்தினைப் பவளத்தைத்

தேடி மாலயன் காணவொண் ணாதவத்


திருவினைத் தெரிவைமார்

கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்


கொழுந்தேயென் றெழுவார்கள்

நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்


நிகழ்தரு புகழாரே.


09

1188 கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்

கொழுந்தினைச் செழுந்திரளைப்

பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா


மெய்யன்நல் லருளென்றுங்

காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்


டாக்கர்சொற் கருதாதே

பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்


பெருமையைப் பெறுவாரே.


10

1189 பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்

பாவையோ டுருவாருங்

கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்


கொழுந்தினைச் செழும்பவளம்

வந்து லாவிய காழியுள் ஞானசம்


பந்தன்வாய்ந் துரைசெய்த

சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்


தாங்குவர் புகழாலே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர், தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.110 திருமாந்துறை 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1190 செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்

செருந்திசெண் பகமானைக்

கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை


குருந்தலர் பரந்துந்தி

அம்பொன் நேர்வரு காவிரி வடகரை


மாந்துறை யுறைகின்ற

எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ


லேத்துதல் செய்வோமே.


01

1191 விளவு தேனொடு சாதியின் பலங்களும்

வேய்மணி நிரந்துந்தி

அளவி நீர்வரு காவிரி வடகரை


மாந்துறை உறைவானத்

துளவ மால்மக னைங்கணைக் காமனைச்


சுடவிழித் தவனெற்றி

அளக வாணுதல் அரிவைதன் பங்கனை


யன்றிமற் றறியோமே.


02

1192 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்

கூந்தலின் குலைவாரி

ஓடு நீர்வரு காவிரி வடகரை 


மாந்துறை யுறைநம்பன்

வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்


வானவர் மகிழ்ந்தேத்துங்

கேடி லாமணி யைத்தொழ லல்லது


கெழுமுதல் அறியோமே.


03

1193 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை

இளமரு திலவங்கங்

கலவி நீர்வரு காவிரி வடகரை


மாந்துறை யுறைகண்டன்

அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்


ஆடர வுடன்வைத்த

மலையை வானவர் கொழுந்தினை யல்லது


வணங்குதல் அறியோமே.


04

1194 கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி

குரவிடை மலருந்தி

ஓங்கி நீர்வரு காவிரி வடகரை


மாந்துறை யுறைவானைப்

பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்


பாட்டவி மலர்சேர்த்தித்

தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்


தலைப்படுந் தவத்தோரே.


05

1195 பெருகு சந்தனங் காரகில் பீலியும்

பெருமரம் நிமிர்ந்துந்திப்

பொருது காவிரி வடகரை மாந்துறைப்


புனிதனெம் பெருமானைப்

பரிவி னாலிருந் திரவியும் மதியமும்


பார்மன்னர் பணிந்தேத்த

மருத வானவர் வழிபடு மலரடி


வணங்குதல் செய்வோமே.


06

1196 நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்

நாண்மல ரவைவாரி

இறவில் வந்தெறி காவிரி வடகரை


மாந்துறை யிறைஅன்றங்

கறவ னாகிய கூற்றினைச் சாடிய


அந்தணன் வரைவில்லால்

நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்


நிரைகழல் பணிவோமே.


07

1197 மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட

மந்திகள் மாணிக்கம்

உந்தி நீர்வரு காவிரி வடகரை


மாந்துறை யுறைவானை

நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை


நெரித்திடு விரலானைச்

சிந்தி யாமனத் தாரவர் சேர்வது


தீநெறி யதுதானே.


08

1198 நீல மாமணி நித்திலத் தொத்தொடு

நிரைமலர் நிரந்துந்தி

ஆலி யாவரு காவிரி வடகரை


மாந்துறை யமர்வானை

மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா


மலரடி யிணைநாளுங்

கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்


கூற்றுவன் நலியானே.


09

1199 நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்

நெடுங்கழை நறவேலம்

நன்று மாங்கனி கதலியின் பலங்களும்


நாணலின் நுரைவாரி

ஒன்றி நேர்வரு காவிரி வடகரை


மாந்துறை யொருகாலம்

அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது


அதுவவர்க் கிடமாமே.


10

1200 வரைவ ளங்கவர் காவிரி வடகரை

மாந்துறை யுறைவானைச்

சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்


செழுமறை நிறைநாவன்

அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்


பந்தனன் புறுமாலை

பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்


பாவமும் இலர்தாமே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஐராவணேசுவரர், தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.111 திருவாய்மூர் 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1201 தளிரிள வளரென உமைபாடத் 

தாள மிடவோர் கழல்வீசிக்

கிளரிள மணியர வரையார்த் 


தாடும் வேடக் கிறிமையார்

விளரிள முலையவர்க் கருள்நல்கி 


வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்

வளரிள மதியமொ டிவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


01

1202 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி 

விரிதரு கோவண வுடைமேலோர்

பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் 


பலபல கடைதொறும் பலிதேர்வார்

சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் 


செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ

வந்தனை பலசெய இவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


02

1203 பண்ணிற் பொலிந்த வீணையர் 

பதினெண் கணமு முணராநஞ்

சுண்ணப் பொலிந்த மிடற்றினார் 


உள்ள முருகி லுடனாவார்

சுண்ணப் பொடிநீ றணிமார்பர் 


சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற

வண்ணப் பிறையோ டிவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


03

1204 எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல் 

எறிபொறி யரவினொ டாறுமூழ்க

விரிகிளர் சடையினர் விடையேறி 


வெருவவந் திடர்செய்த விகிர்தனார்

புரிகிளர் பொடியணி திருவகலம் 


பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்

வரியர வரைக்கசைத் திவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


04

1205 அஞ்சன மணிவணம் எழில்நிறமா 

வகமிட றணிகொள வுடல்திமில

நஞ்சினை யமரர்கள் அமுதமென 


நண்ணிய நறுநுதல் உமைநடுங்க

வெஞ்சின மால்களி யானையின்தோல் 


வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே

வஞ்சனை வடிவினோ டிவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


05

1206 அல்லிய மலர்புல்கு விரிகுழலார் 

கழலிணை யடிநிழ லவைபரவ

எல்லியம் போதுகொண் டெரியேந்தி 


யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்

சொல்லிய அருமறை யிசைபாடிச் 


சூடிள மதியினர் தோடுபெய்து

வல்லியந் தோலுடுத் திவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


06

1207 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் 

கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்

முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் 


முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்

பொடியணி வடிவொடு திருவகலம் 


பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்

வடிநுனை மழுவினொ டிவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


07

1208 கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக் 

கண்ணியர் வீணையர் தாமுமஃதே

எட்டுணை சாந்தமொ டுமைதுணையா 


இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்

பட்டிணை யகலல்குல் விரிகுழலார் 


பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய

வட்டணை யாடலொ டிவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


08

1209 ஏனம ருப்பினொ டெழிலாமை 

யிசையப் பூண்டோ ரேறேறிக்

கானம திடமா வுறைகின்ற 


கள்வர் கனவில் துயர்செய்து

தேனுண மலர்கள் உந்திவிம்மித் 


திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற

வானநன் மதியினோ டிவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


09

1210 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் 

சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்

பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் 


பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்

கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் 


குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய

வாடல்வெண் டலைபிடித் திவராணீர் 


வாய்மூ ரடிகள் வருவாரே.


10

1211 திங்களோ டருவரைப் பொழிற்சோலைத் 

தேனலங் கானலந் திருவாய்மூர்

அங்கமோ டருமறை யொலிபாடல் 


அழல்நிற வண்ணர்தம் மடிபரவி

நங்கள்தம் வினைகெட மொழியவல்ல 


ஞானசம் பந்தன் தமிழ்மாலை

தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் 


தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.


11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர், தேவியார் - பாலினுநன்மொழியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.112 திருஆடானை 

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்


1212 மாதோர் கூறுகந் தேற தேறிய

ஆதியா னுறை ஆடானை

போதினாற் புனைந் தேத்து வார்தமை

வாதியா வினை மாயுமே. 01

1213 வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்

றாடலா னுறை ஆடானை

தோடுலா மலர் தூவிக் கைதொழ

வீடும் நுங்கள் வினைகளே. 02

1214 மங்கை கூறினன் மான்ம றியுடை

அங்கை யானுறை ஆடானை

தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்

மங்கு நோய்பிணி மாயுமே. 03

1215 சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை

அண்ண லானுறை ஆடானை

வண்ண மாமலர் தூவிக் கைதொழ

எண்ணு வாரிடர் ஏகுமே. 04

1216 கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய

ஐயன் மேவிய ஆடானை

கைய ணிம்மல ரால்வ ணங்கிட

வெய்ய வல்வினை வீடுமே. 05

1217 வானி ளம்மதி மல்கு வார்சடை

ஆனஞ் சாடலன் ஆடானை

தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த

ஊன முள்ள வொழியுமே. 06

1218 துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை

அலங்க லானுறை ஆடானை

நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்

வலங்கொள் வார்வினை மாயுமே. 07

1219 வெந்த நீறணி மார்பிற் றோல்புனை

அந்த மில்லவன் ஆடானை

கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ்

சிந்தை யார்வினை தேயுமே. 08

1220 மறைவல் லாரொடு வான வர்தொழு

தறையுந் தண்புனல் ஆடானை

உறையும் ஈசனை யேத்தத் தீவினை

பறையும் நல்வினை பற்றுமே. 09

1221 மாய னும்மல ரானுங் கைதொழ

ஆய அந்தணன் ஆடானை

தூய மாமலர் தூவிக் கைதொழ

தீய வல்வினை தீருமே. 10

1222 வீடி னார்மலி வேங்க டத்துநின்

றாட லானுறை ஆடானை

நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்

பாட நோய்பிணி பாறுமே. 11இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர், தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.113 சீகாழி 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1223 பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்

அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்

இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்

கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. 01

1224 மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்

அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்

புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே

கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே. 02

1225 கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்

மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்

நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க்

கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே. 03

1226 குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்

பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்

மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்

கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. 04

1227 விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்

எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது

பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்

கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. 05

1228 தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்

பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது

கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்

காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே. 06

1229 மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்

தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்

இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்

கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே. 07

1230 முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்

அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்

தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது

கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே. 08

1231 பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை

மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்

தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்

காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே. 09

1232 உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார்

முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம்

மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர

கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே. 10

1233 கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்

உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற்

பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்

விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.114 திருக்கேதாரம் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1234 தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர்

இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்

வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்

கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே. 01

1235 பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் தேத்தவே

வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந்

தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங்

கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. 02

1236 முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்

எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால்

மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்

கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே. 03

1237 உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள்

எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால்

பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க்

கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே. 04

1238 ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்

வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால்

மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய

கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே. 05

1239 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல்

தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால்

ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங்

கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே. 06

1240 மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்

தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால்

உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல்

கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே. 07

1241 அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்

வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால்

குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்

கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே. 08

1242 ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர்

தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால்

வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக்

கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே. 09

1243 கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர்

இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால்

அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக்

கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. 10

1244 வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்

ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை

ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்

வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே. 11இத்தலம் வடதேசத்திலுள்ளது.

சுவாமிபெயர் - கேதாரேசுவரர்,

தேவியார் - கௌரியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.115 திருப்புகலூர் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1245 வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப்

பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்

திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய

எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே. 01

1246 வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல்

வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்

போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே

சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே. 02

1247 மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர்த் தாமரை

புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்

தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை

அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே. 03

1248 பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே

நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால்

யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம்

ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே. 04

1249 அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப்

பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்

முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்

இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே. 05

1250 குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால்

உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன்

புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள்

நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே. 06

1251 ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப்

பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான்

ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்

பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே. 07

1252 உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன்

கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால்

செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்

பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே. 08

1253 நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்

ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான்

சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ

பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே. 09

1254 வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும்

போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள்

தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்

ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே. 10

1255 புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள்

வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை

அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்

பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.116 திருநாகைக்காரோணம் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1256 கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா

வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை

வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது

கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 01

1257 விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்

இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது

மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்

கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 02

1258 வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்

முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்

நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது

கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 03

1259 வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்

கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்

உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம்

கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 04

1260 வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே

நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே

போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது

கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 05

1261 விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்

படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்

உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது

கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 06

1262 பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனை

செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்

எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது

கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 07

1263 பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற

அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது

மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்

கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 08

1264 நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால்

அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது

மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்

கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 09

1265 உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும்

பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்

நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது

கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. 10

1266 மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்

நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்

வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்

சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.117 திரு இரும்பைமாகாளம் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1267 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்

கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்

எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்

வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. 01

1268 வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின

கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின

ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள்

மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. 02

1269 வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்

எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்

கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்

மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. 03

1270 நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்

அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்

எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்

மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. 04

1271 பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்

கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி

ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்

மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. 05

1272 குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை

பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை

இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்

மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. 06

1273 பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்

தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்

எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்

மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. 07

1274 நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்

அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே

இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்

வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. 08

1275 அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி

எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்

இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்

மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே. 09

1276 அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி

பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்

குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்

மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. 10

1277 எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்

மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்

அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்

பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே. 11இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மாகாளேசுவரர், தேவியார் - குயிலம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.118 திருத்திலதைப்பதி - மதிமுத்தம் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1278 பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே

அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்

கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி

வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே. 01

1279 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்

கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்

தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி

வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே. 02

1280 அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்

கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்

திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி

மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே. 03

1281 கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்

வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்

செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி

மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே. 04

1282 புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்

பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்

விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்

மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே. 05

1283 விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்

பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்

தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி

மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே. 06

1284 ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி

கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்

தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி

மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே. 07

1285 கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை

எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது

புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்

மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே. 08

1286 படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை

இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்

திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி

மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே. 09

1287 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்

பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்

பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி

மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே. 10

1288 மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்

கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்

பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்

சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே. 11இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.119 திருநாகேச்சரம் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1289 தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்

பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை

நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்

தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே. 01

1290 பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய

வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்

நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்

கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே. 02

1291 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்

பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை

நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்

திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே. 03

1292 கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்

நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந்

தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்

நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே. 04

1293 வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்

பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை

நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்

உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே. 05

1294 காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்

நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின்

நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்

கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே. 06

1295 வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய்

பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை

நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்

மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே. 07

1296 இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும்

மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய

நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்

வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே. 08

1297 கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா

எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா

விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்

பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே. 09

1298 தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்

கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை

நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்

மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே. 10

1299 கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்

நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம்

பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்

எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.120 திருமூக்கீச்சரம் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1300 சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்

காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்

ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ

வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. 01

1301 வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்

கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா

விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக்

கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே. 02

1302 மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை

உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்

செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த

பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே. 03

1303 அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே

மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந்

தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்

மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே. 04

1304 விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே

நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்

வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்

அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 05

1305 வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்

வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்

அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய

எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. 06

1306 அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்

உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ

விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்

அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 07

1307 ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்

கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்

ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல்

மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே. 08

1308 நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்

சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்

சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன்

சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. 09

1309 வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்

உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்

ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்

பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே. 10

1310 மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்

செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்

நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன

சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே. 11

திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.121 திருப்பாதிரிப்புலியூர் 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1311 முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்

புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்

தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்

பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே. 01

1312 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே

முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்

புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை

உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே. 02

1313 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்

பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்

வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்

அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே. 03

1314 போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்

போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்

ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை

ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே. 04

1315 ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை

நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்

போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்

பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே. 05

1316 மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்

புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும்

பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்

குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே. 06

1317 கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்

சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்

பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்

அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே. 07

1318 வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை

ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்

பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை

நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே. 08

1319 அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை

பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்

முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்

தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே. 09

1320 உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்

திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்

எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்

புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே. 10

1321 அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்

பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்

சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்

வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே. 11இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.


திருச்சிற்றம்பலம்


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


2.122 திருப்புகலி 

பண் - செவ்வழி 

திருச்சிற்றம்பலம்


1322 விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்

படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது

கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்

புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. 01

1323 வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்

ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது

சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்

சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. 02

1324 வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்

துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது

கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி

புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. 03

1325 திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க்

கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது

பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்

புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. 04

1326 ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்

நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது

மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப்

பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே. 05

1327 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்

ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது

கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்

புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. 06

  இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07

1328 தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்

தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது

கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்

பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே. 08

1329 கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்

காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது

நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்

பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. 09

1330 தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்

இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது

மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்

அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே. 10

1331 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்

கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்

செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்

எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே. 11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 


திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த 

தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்.

பண் - 24. அவை,


பகற் பண் : 

புறநீர்மை, காந்தாரம், பியந்தைக்காந்தாரம், 

கவுசிகம், இந்தளம், தக்கேசி, சாதாரி, நட்டபாடை,

நட்டராகம், பழம்பஞ்சுரம், காந்தாரபஞ்சமம், பஞ்சமம். ஆக பகற்பண் - 12.


இராப்பண் : 

தக்கராகம், பழந்தக்கராகம், சீகாமரம், கொல்லி, 

கொல்லிக்காவாணம், வியாழக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி, 

அந்தாளிக்குறிஞ்சி, குறிஞ்சி. ஆக இராப்பண் - 9


பொதுப்பண் : 

செவ்வழி, செந்துருதி, திருத்தாண்டகம். ஆக பொதுப்பண் - 3 

 


To Top