திருவாசகம் - II
கோயில் மூத்த
திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம்
(தில்லையில்
அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
உடையாள் உன்தன்
நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள்
இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள்
இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே
என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378
முன்னின்
றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல்
செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி
வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார்
என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379
உகந்தானே அன்புடை
அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன்
சகந்தான் அறிய
முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ
மகந்தான் செய்து
வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா
விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380
முழுமுத லேஐம்
புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்
வழிமுதலேநின்
பழவடி யார் திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள்
தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று
அழுமதுவேயன்
றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381
அரைசே பொன்னம்
பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத்
திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார்
களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின்
நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382
ஏசா நிற்பர்
என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம்
பேசா நிற்பர்
யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர்
சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம்
பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383
இரங்கும் நமக்கம்
பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை
அருங்கற் பனைகற்
பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும்
அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து
வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே. 384
அருளா தொழிந்தால்
அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப்
புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா
மருளார் மனத்தோ
டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங்
காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385
சிரிப்பார்
களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை
விரப்பார்
கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்
தரிப்பார்
பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே
தரிப்பாய் நாயேன்
இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386
நல்கா தொழியான்
நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர்
மல்கா வாழ்த்தா
வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னப்
பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும்
உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387
திருச்சிற்றம்பலம்