திருவாசகம் - II
கோயில்
திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்
(தில்லையில்
அருளியது - எழுசீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்)
மாறிநின்றென்னை
மயங்கிடும் வஞ்சப்
புலனைந்தின்
வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள்
எழுபரஞ்சோதி
உள்ளவா
காணவந்தருளாய்
தேறலின் தெளிவே
சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஈறிலாப் பதங்கள்
யாவையும் கடந்த
இன்பமே என்னுடை
அன்பே. 388
அன்பினால்
அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்
கசிந்துருக
என்பாம் அல்லா
இன்னருள் தந்தாய்
யானிதற்
கிலனொர்கைம்மாறு
முன்புமாய்ப்
பின்னும் முழுதுமாய்ப்
பரந்த முத்தனே முடிவிலா
முதலே
தென்பெருந்துறையாய்
சிவபெருமானே
சீருடைச்
சிவபுரத்தரைசே. 389
அரைசனே அன்பர்க்
கடியனே னுடைய
அப்பனே ஆவியோ
டாக்கை
புரைபுரை கனியப்
புகுந்துநின்றுருக்கிப்
பொய்யிருள்
கடிந்த மெய்ச்சுடரே
திரைபொரா மன்னும்
அமுதத் தெண்கடலே
திருப்பெருந்துறையுறை
சிவனே
உரையுணர்
விறந்துநின்றுணர்வதோர் உணர்வே
யானுன்னை
உரைக்குமா றுணர்த்தே. 390
உணர்ந்த
மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்குந்
தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா
உயிர்கட்கும் உயிரே
எனைப் பிறப்
பறுக்கும் எம்மருந்தே
திணிந்ததோர் இருளில்
தெளிந்ததூ வெளியே
திருப்பெருந்துறையுறை
சிவனே
குணங்கள்
தாமில்லா இன்பமே உன்னைக்
குறுகினேற்
கினியென்ன குறையே. 391
குறைவிலா நிறைவே
கோதிலா அமுதே
ஈறிலாக்
கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய்
மறையின் பொருளுமாய் வந்தேன்
மனத்திடை மின்னிய
மன்னே
சிறைபெறா
நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்
திருப்பெருந்துறையுறை
சிவனே
இறைவனே நீயென்
உடலிடங் கொண்டாய்
இனியுன்னை
யென்னிரக் கேனே. 392
இரந்திரந் துருக
என்மனத் துள்ளே
ஏகின்ற சோதியே
இமையோர்
சிரந்தனிற்
பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந்துறையுறை
சிவனே
நிரந்தஆகாயம்
நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய்
ஆங்கே
கரந்ததோர் உருவே
களித்தனன் உன்னைக்
கண்ணுறங்
கண்டுகொண்டின்றே. 393
இன்றெனக் கருளி
இருள்கடிந்துள்ளக்
தெழுகின்ற ஞாயிறே
போன்று
நின்றநின் தன்மை
நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது
மற்றின்மை
சென்றுசென்றுணுவாய்த்
தேய்ந்துதேய்ந்தொன்றாம்
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஒன்றும் நீயல்லை
அன்றியொன் றில்லை
யாருன்னை
அறியகிற்பாரே. 394
பார்பதம் அண்டம்
அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர்
படரொளிப் பரப்பே
நீருறு தீயே
நினைவதேல் அரிய
நின்மலா
நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை
எழுந்ததோர் தேனே
திருப்பெருந்துறையுறை
சிவனே
ஆருற வெனக்கிய
காரய லுள்ளார்
ஆனந்தம்
ஆக்குமென் சோதி. 395
சோதியாய்த்
தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற்
கரிய
ஆதியே நடுவே
அந்தமே பந்தம்
அறுக்கும்
ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத்
திருவருட்குன்றே
திருப்பெருந்துறையுறை
சிவனே
யாதுநீ போவதோர்
வகையெனக்கருளாய்
வந்துநின் இணையடி
தந்தே. 396
தந்ததுன் தன்னைக்
கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ
சதுரர்
அந்தமொன் றில்லா
ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன்
றென்பால்
சிந்தையே கோயில்
கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறையுறை
சிவனே
எந்தையே ஈசா
உடலிடங் கொண்டாய்
யான் இதற்
கிலன்ஓர்கைம் மாறே. 397
திருச்சிற்றம்பலம்