திருவாசகம் - II
குயிற்பத்து -
ஆத்தும இரக்கம்
(தில்லையில்
அருளியது - ஆசிரிய விருத்தம்)
கீத மினிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும்
வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி
சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதிகுண மொன்று
மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 348
ஏர்தரும் ஏழுல
கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய்
ஆர்கலி சூழ்தென்
னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
பேரருளின்ப
மளித்த பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற்
குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 349
நீல வுருவிற் குயிலே
நீள்மணி மாடம் நிலாவுங்
கோல அழகில்
திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும்
இனிய திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க
இருந்த நாயக னைவரக் கூவாய். 350
தேன்பழச் சோலை
பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
வான்பழித்
திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம்
புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித்
தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். 351
சுந்தரத் தின்பக்
குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின்
றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்
முந்தும் நடுவும்
முடிவு மாகிய மூவ ரறியாச்
சிந்தூரச் சேவடி
யானைச் சேவக னைவரக் கூவாய். 352
இன்பந் தருவன்
குயிலே ஏழுல கும்முழு தாளி
அன்பன் அமுதளித்
தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ
டொத்த நற்பரி மேல்வரு வானைக்
கொம்பின்
மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 353
உன்னை உகப்பன்
குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழிந்தநன்
மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை
வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன்
சோழன் சீரப்புயங் கன்வரக் கூவாய். 354
வாயிங்கே
நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவியவ ருன்னி நிற்ப
ஒண்தழல் விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங்
கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப்
பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 355
காருடைப்
பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச்
செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்
பாரிடைப்
பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின்
மேனி அமுதினை நீவரக் கூவாய். 356
கொந்தண
வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண
னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவ
னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும்
செந்தழல்
போல்திரு மேனித் தேவர்பி ரான்வரக் கூவாய். 357
திருச்சிற்றம்பலம்