திருவாசகம் - II
அன்னைப் பத்து -
ஆத்தும பூரணம்
(தில்லையில்
அருளியது - கலிவிருத்தம்)
வேத மொழியர்வெண்
ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர்
அன்னே என்னும்
நாதப் பறையினர்
நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார்
அன்னே என்னும். 338
கண்ணஞ் சனத்தார்
கருணைக் கடலினர்
உள்நின்
றுருக்குவர் அன்னே என்னும்
உள்நின் றுருக்கி
உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால்
அன்னே என்னும். 339
நித்த மணாளர்
நிரம்ப அழகியர்
சித்தத்
திருப்பரால் அன்னே என்னும்
சித்தத்
திருப்பவர் தென்னன் பெரும்துறை
அத்தர்ஆ னந்தரால்
அன்னே என்னும். 340
ஆடரப் பூணுடைத்
தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா
றன்னே என்னும்
வேடம் இருந்தவா
கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுவென்ன
அன்னே என்னும். 341
நீண்ட கரத்தர்
நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன்
னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர்
பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு
செய்வரால் அன்னே என்னும். 342
உன்னற் கரியசீர்
உத்தர மங்கையர்
மன்னுவ
தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ
தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதியசம்
அன்னே என்னும். 343
வெள்ளைக்
கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப்
பாயந்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப்
பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான்
உள்ளங் கவர்வரால்
அன்னே என்னும். 344
தாளி அறுகினர்
சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால்
அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும்
அடிகளார் தங்கையில்
தாள மிருந்தவா
றன்னே என்னும். 345
தையலோர் பங்கினர்
தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால்
அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர்
போதலும் என்னுள்ளம்
நையுமிது வென்னே
அன்னே என்னும். 346
கொன்றை மதியமும்
கூவின மத்தமும்
துன்றிய
சென்னியர் அன்னே என்னும்
துன்றிய
சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா
றன்னே என்னும். 347
திருச்சிற்றம்பலம்