திருவாசகம் - II
திருஉந்தியார் -
ஞான வெற்றி
(தில்லையில்
அருளியது- கலித்தாழிசை)
வளைந்தது வில்லு
விளைந்தது பூசல்
உளைந்தன
முப்புரம் உந்தீபற
ஒருங்குடன்
வெந்தவா றுந்தீபற. 295
ஈரம்பு கண்டிலம்
ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம்
உந்தீபற
ஒன்றும் பெருமிகை
உந்தீபற. 296
தச்சு
விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு
முறிந்ததென் றுந்தீபற
அழந்தன முப்புரம்
உந்தீபற. 297
உய்யவல் லாரெரு
மூவரைக் காவல்கொண்
டெய்யவல்
லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென்
றுந்தீபற. 298
சாடிய வேள்வி
சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி
உந்தீபற
உருந்திர நாதனுக்
குந்தீபற. 299
ஆவா திருமால்
அவிப்பாகங் கொண்டன்று
சாவா
திருந்தானென் று தீபற
சதுர்முகன்
தாதையென் றுந்தீபற. 300
வெய்யவன் அங்கி
விழுங்கத்திரட்டிய
கையைத்
தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று
வேள்வியென் றுந்தீபற. 301
பார்ப்பதி
யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென்
னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக்
குந்தீபற. 302
புரந்தர னாரொரு
பூங்குயி லாகி
மரந்தனி லேறினார்
உந்தீபற
வானவர் கோனென்றே
உந்தீபற. 303
வெஞ்சின வேள்வி
வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி
உந்தீபற
தொடர்ந்த பிறப்பற
உந்தீபற. 304
ஆட்டின் தலையை
விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி
உந்தீபற
கொங்கை
குலுங்கிநின் றுந்தீபற. 305
உண்ணப் புகுந்த
பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா
றுந்தீபற
கருக்கெட
நாமெல்லாம் உந்தீபற. 306
நாமகள் நாசி
சிரம்மி மன்படச்
சோமன் முகன்
நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட
உந்தீபற. 307
நான்மறை யோனும்
அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா
றுந்தீபற
புரந்தரன்
வேள்வியி லுந்தீபற. 308
சூரிய னார்தொண்டை
வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா
றுந்தீபற
மயங்கிற்று
வேள்வியென் றுந்தீபற. 309
தக்கனா ரன்றே
தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின்
றுந்தீபற
மடிந்தது
வேள்வியென் றுந்தீபற. 310
பாலக னார்க்கன்று
பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே
யந்தீபற
குமரன்தன்
தாதைக்கே உந்தீபற. 311
நல்ல மலரின்மேல்
நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென்
றுந்தீபற
உகிரால்
அரிந்ததென் றுந்தீபற. 312
தேரை நிறுத்தி
மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா
றுந்தீபற
இறுபதும்
இற்றதென் றுந்தீபற. 313
ஏகாசமிட்ட
இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென்
றுந்தீபற
அதற்கப்பாலுங்
காவலென் றுந்தீபற. 314
திருச்சிற்றம்பலம்