திருவாசகம் - II
திருப்பள்ளியெழுச்சி
- திரோதான சுத்தி
(திருப்பெருந்துறையில்
அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )
போற்றியென்
வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது
பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின்
திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை
கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க்
கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்
துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர்
கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு
மான்பள்ளி யெழுந்தருளாயே. 368
அருணண்இந்திரன்
திசை அணுகினன் இருள்போய்
அகன்றது
உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருனையின்
சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று
அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை
அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்
துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர
வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி
யெழுந்தருளாயே. 369
கூவின பூங்குயில்
கூவின கோழி
குருகுகள்
இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை
ஒளியொளி உதயத்து
ஓருப்படு கின்றது
விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல்
தாளிணை காட்டாய்
திருப்பெருந்
துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி
யாய்எமக் கெளியாய்
எம்பெரு
மான்பள்ளி யெழுந்தருளாயே. 370
இன்னிசை வீணையார்
யாழினர் ஒருபால்
இருக்கொடு
தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய
பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
தொழுகையர்
அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில்
அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்
துறையுறை சிவபெரு மானே
என்னையும்
ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெரு
மான்பள்ளி யெழுந்தருளாயே. 371
பூதங்கள்
தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன்
வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல்
ஆடுதல் அல்லால்
கேட்டறி
யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள்
வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்
கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள்
அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு
மான்பள்ளி யெழுந்தருளாயே. 372
பப்பற
விட்டிருந்து உணரும்நின் அடியுaர்
பந்தனை வந்தறுத்
தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர்
மானுடத் தியல்பின்
வணங்குகின்றார்
அணங் கின்மண வாளா
செப்புறு
கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்
துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு
அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு
மான்பள்ளி யெழுந்தருளாயே. 373
அது பழச்சுவையென
அமுதென அறிதற்கு
அரிதென எளிதென
அமரும் அறியார்
இது அவன்
திருவுரு இவன் அவன் எனவே
எங்களை
ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்
மதுவளர்
பொழில்திரு உத்தர கோச
மங்கையுள்ளாய்திருப்
பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு
மாறது கேட்போம்
எம்பெருமான்பள்ளி
யெழுந்தருளாயே. 374
முந்திய முதல்நடு
இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர்
யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும்
நீயும்நின்னடியார்
பழங்குடில்
தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல்
புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந்
துறையறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும்
காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி
யெழுந்தருள்யே. 375
விண்ணகத் தேவரும்
நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன
தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து
வாழச்செய் தானே
வண்திருப்
பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று
களிதரு தேனே
கடலமு தேகரும்
பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல
குக்குயி ரானாய்
எம்பெருமான்பள்ளி
எழுந்தருளாயே. 376
புவனியில்
போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின்
றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக்
கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந்
துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப்
பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின்
அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவணியில்
புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி
யெழுந்தருளாயே. 377
திருச்சிற்றம்பலம்