திருவாசகம் - II
திருப்பூவல்லி -
மாயா விசயம் நீக்குதல்
(தில்லையில்
அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
இணையார் திருவடி
என்தலைமேல் வைத்தலுமே
துணையான
சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார்
புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன்
சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275
எந்தையெந்
தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம்
அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில்
ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப்
பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276
நாயிற் கடைப்பட்ட
நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுங்
தயாவுடைய தம்பொருமான்
மாயப் பிறப்பறுந்
தாண்டானென் வல்வினையின்
வாயிற்
பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277
பண்பட்ட தில்லைப்
பதிfக்காசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
அருக்கன் எச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
படைவீர பத்திரரால்
புணப்பட்ட வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 278
தேனாடு கொன்றை
சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந்
துள்புகுந்தான் உலகர்முன்னே
நானாடி ஆடிநின்
றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே
பூவல்லி கொய்யாமோ. 279
எரிமூன்று
தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன்
திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி
உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரத்தவா
பூவல்லி கொய்யாமோ. 280
வணங்கத் தலை
வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்தத்தன்
சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொடணிதில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
குணங் கூரப்
பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281
நெறிசெய்
தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
குறிசெயது
கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை
முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த
வாபாடிபட பூவல்லி கொய்யாமோ. 282
பன்னாட் பரவிப்
பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம்
துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நா
ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 283
பேராசை யாமிந்தப்
பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி
யென் தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை
உண்டுகந்த காபாலி
போரார் புறம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 284
பாலும் அமுதமுந்
தேனுடனாம் பராபரமாய்க்
கோலங்
குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார்
நன்னெறியாம் அந்நெறியே
போலும்
புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285
வானவன் மாலயன்
மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று
கூடலிலாக் குணங்குறியோன்
ஆன நெடுங்கடல்
ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா
பூவல்லி கொய்யாமோ. 286
அன்றால நீழற்கீழ்
அருமறைகள் தானருளி
நன்றாக வானவர்
மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும்
நிறைகழலோள் புனைகொன்றைப்
பொன்தாது
பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287
படமாக என்னுள்ளே
தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக்
கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார்
மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 288
அங்கி அருக்கன்
இராவணன் அந்தகன் கூற்றன்
செங்கண் அரிஅயன்
இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில்
தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர்
பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289
திண்போர்
விடையான் சிவபுரத்தார் போரேறு
மண்பால்
மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
தண்டாலே
பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
புண்பாடல்
பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290
முன்னாய மாலயனும்
வானவரும் தானவரும்
பொன்னார் திருவடி
தாமறியார் போற்றுவதே
என்னாகம்
உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்
பன்னாகம்
பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291
சீரார் திருவடித்
திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய்
அடியேன் அகமகிழத்
தேராந்த வீதிப்
பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந்
தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292
அத்தி யுரித்தது
போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்
டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி
முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
பூவல்லி கொய்யாமோ. 293
மாவார வேறி
மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந்
திகழப் பெருந்துறையான்
கோவாகி
வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்
பூவார்
கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294
திருச்சிற்றம்பலம்