திருவாசகம் - II
திருத்தசாங்கம் -
அடிமை கொண்ட முறைமை
(தில்லையில்
அருளியது -நேரிசை வெண்பா)
ஏரார் இளங்கிளியே
எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம்
தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான்
வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான்
தேவர்பிரான் என்று. 358
ஏதமிலா இன்சொல்
மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்மை
ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு
அன்பாண்டு மீளா
அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே
தெளி. 359
தாதாடு
பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும்
பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப்
பத்தரெல்லாம்
பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை
யூர். 360
செய்யவாய்ப்
பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன்
பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை
மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங்
காணுடையான் ஆறு. 361
கிஞ்சுகவாய்
அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும்
மலைபகராய் - நெஞ்சத்து
இருளகல வாள்வீசி
இன்பமரும் முத்தி
அருளுமலை
என்பதுகாண் ஆய்ந்து. 362
இப்பாடே
வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச்
சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ்
சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும்
மகிழ்ந்து. 363
கோற்றேன்
மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள்
மாற்றாறை
வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா
நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண்
கைக்கொள் படை. 364
இன்பால்
மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள்
முன்பால் முழங்கும்
முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப்
பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப்
பறை. 365
ஆய
மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால்
மேய
பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை
நாளுமணு காவண்ணம்
நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்
உவந்த தார். 366
சோலைப் பசுங்கிளியே
தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங்
கொடிகூறாய் - சாலவும்
ஏதிலார்
துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாம்
கொடி. 367
திருச்சிற்றம்பலம்