திருவாசகம் - II
திருப்பொன்னூசல்
- அருட் சுத்தி
(தில்லையில்
அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)
சீரார் பவளங்கால்
முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை
ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா
நாண்மலர்த்தான் நாயடியேற்கு
ஊராகத்
தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின்
அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர்
பொன்னூசல் ஆடாமோ. 329
மூன்றங் கிலங்கு
நயனத்தன் மூவாத
வான்தங்கு
தேவர்களுங் காணா மலரடிகள்
தேனதங்கித்
தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி
நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங்
கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங்
கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330
முன்னீறும் ஆதியு
மில்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி
யிமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீ
றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி
யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட
வியன்மா ளிகைபாடிப்
பொனனேறு
பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331
நஞ்சமர்
கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி
உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள்
தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே
நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல்
பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சுமார்
வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332
ஆணோ அலியோ
அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள்
கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட்
கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும்
உத்தர கோமங்கைக்
கோணார்
பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார்
வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333
மாதாடு பாகத்தன்
உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச்
சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை
ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந்
திகழப் பிறப்பறுப்பான்
காதாடு
குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு
பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334
உன்னற் கரியதிரு
வுத்தர கோசமங்கை
மன்னிப்
பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப்
பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின்
மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன்
என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த
பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335
கோலவரைக்குடுமி
வந்து குவலத்துச்
சால அமுதுண்டு
தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற்
கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந்
திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை
வாயார நாம்பாடிப்
பூலித்
தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336
தெங்குலவு சோலைத்
திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித்
தனியுருவம் வந்தருளி
எங்கள்
பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு
கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு
கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு
பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337
திருச்சிற்றம்பலம்